LPG தட்டுப்பாடு: எரிவாயு சிலிண்டர் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க.. தவெக
சென்னை: மக்களின் அடிப்படைத் தேவையான உணவைச் சமைக்க உதவும் எரிவாயு விஷயத்தில் எவ்வித அரசியலும் இருக்கக்கூடாது. குழப்பமான சூழலைச் சீர் செய்து, தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் ஒன்றிய மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு குறித்து வரும் செய்திகள், சாமானிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சில தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் இப்போது வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திண்டாடி வரும் மக்களுக்கு, இப்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்பது "இடிமேல் இடி" விழுந்தது போல உள்ளது. சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல், விநியோகத்தில் தாமதம் எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் அவலமும் ஆங்காங்கே அரங்கேற வாய்ப்புள்ளது. அதை உடனே கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக, வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நேரடியாக உணவுகளின் விலை உயர்வுக்கு வழிவகுப்பதோடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். தட்டுப்பாடில்லை என்று அரசு கூறினாலும், கள யதார்த்தம் அதற்கு மாறாக இருப்பதே மக்களின் அச்சத்திற்குக் காரணம்.
ஒன்றிய தமிழக அரசுகள் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்காமல், உடனடியாகத் தலையிட வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி, தமிழகத்திற்குத் தேவையான எரிவாயு இருப்பை உறுதி செய்ய வேண்டும். பதுக்கல் நடவடிக்கைகளைத் தடுக்க மாநிலம் தழுவிய அளவில் அதிரடிச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித தடையுமின்றி மக்களுக்குச் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.
மக்களின் அடிப்படைத் தேவையான உணவைச் சமைக்க உதவும் எரிவாயு விஷயத்தில் எவ்வித அரசியலும் இருக்கக்கூடாது.குழப்பமான சூழலைச் சீர் செய்து, தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் ஒன்றிய மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்!












Click it and Unblock the Notifications