நடுங்கிய பல்லாவரம்.. நள்ளிரவில் துப்பாக்கி சத்தம்.. ராணுவ அதிகாரியை கொன்று.. வீரர் தற்கொலை!
ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: ஏன் ஒழுங்கா வேலைக்கு வரலன்னு கேட்டதாலே, ராணுவ அதிகாரியை சுட்டு கொன்று, தானும் அதே துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டார் ஒரு வீரர்.. சென்னையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகாரிகளுக்கான குடியிருப்பில் பிரவீன்குமார் ஜோஷி என்பவர் வசித்து வந்தார். ராணுவ அகடாமியில் ஹவில்தாராக பணியாற்றி வந்த இவர், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

அவருக்குக் கீழ் ரைஃபிள் மேனாக ஜெட்ஷீர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே வேலை விஷயமாக நிறைய பிரச்சனை இருந்துள்ளதாக தெரிகிறது. வேலைக்கு ஏன் ஒழுங்காக வருவதில்லை என்று உயரதிகாரி, ஜெட்ஷீரை கேட்டுள்ளதாகவும், அதனால் இருவருக்கும் வாக்குவாதம், சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவும் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரவீன்குமார் தூங்க போய்விட்டார். ஆனால் ஆத்திரத்திலிருந்த ஜெட்ஷீர், நடுராத்திரி உயரதிகாரி வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு தூங்கி கொண்டிருந்த பிரவீன்குமாரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனே, ஜெட்ஷீர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து டமார்.. டமார் என நள்ளிரவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு குவார்ட்டர்ஸில் இருந்தவர்கள் அதிர்ச்சியானார்கள். ஓடிப்போய் சென்று பார்த்ததில், இருவருமே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து பல்லாவரம் போலீசுக்கு சொல்லப்பட்டதும், விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications