நடுங்கிய பல்லாவரம்.. நள்ளிரவில் துப்பாக்கி சத்தம்.. ராணுவ அதிகாரியை கொன்று.. வீரர் தற்கொலை!
ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: ஏன் ஒழுங்கா வேலைக்கு வரலன்னு கேட்டதாலே, ராணுவ அதிகாரியை சுட்டு கொன்று, தானும் அதே துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டார் ஒரு வீரர்.. சென்னையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகாரிகளுக்கான குடியிருப்பில் பிரவீன்குமார் ஜோஷி என்பவர் வசித்து வந்தார். ராணுவ அகடாமியில் ஹவில்தாராக பணியாற்றி வந்த இவர், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

அவருக்குக் கீழ் ரைஃபிள் மேனாக ஜெட்ஷீர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே வேலை விஷயமாக நிறைய பிரச்சனை இருந்துள்ளதாக தெரிகிறது. வேலைக்கு ஏன் ஒழுங்காக வருவதில்லை என்று உயரதிகாரி, ஜெட்ஷீரை கேட்டுள்ளதாகவும், அதனால் இருவருக்கும் வாக்குவாதம், சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவும் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரவீன்குமார் தூங்க போய்விட்டார். ஆனால் ஆத்திரத்திலிருந்த ஜெட்ஷீர், நடுராத்திரி உயரதிகாரி வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு தூங்கி கொண்டிருந்த பிரவீன்குமாரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனே, ஜெட்ஷீர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து டமார்.. டமார் என நள்ளிரவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு குவார்ட்டர்ஸில் இருந்தவர்கள் அதிர்ச்சியானார்கள். ஓடிப்போய் சென்று பார்த்ததில், இருவருமே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து பல்லாவரம் போலீசுக்கு சொல்லப்பட்டதும், விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications