சென்னையில் அதிர்ச்சி! காதலனுடன் பிரேக் அப்! ஆத்திரத்தில் காதலி மீது பெட்ரோல் ஊற்றிய இருவர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காதலனை பிரிந்த காதலி மீது பெட்ரோலை ஊற்றி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பரும் யானைக்கவுணி போலீஸாரால் கைது செய்யப்பட்டன.

சென்னையை சேர்ந்தவர் அர்ஜுன் (20). இவர் உணவு டெலிவரி செய்யும் நிர்வாகியாவார், இவருடைய நண்பர் ஜேம்ஸ் (20). இதில் அர்ஜுன் 19 வயது பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

chennai crime

இந்த நிலையில் அர்ஜுனின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அவருடனான காதலை அந்த பெண் முறித்துக் கொண்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன், அந்த 19 வயது பெண்ணை தன்னுடன் மீண்டும் பழகுமாறும் காதலிக்குாறும் தொந்தரவு செய்து கொண்டே இருந்தாராம்.

இதற்கு அந்த பெண் மறுத்துவிட்டார். அர்ஜுனின் சில நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிய அந்த பெண் அவரை மீண்டும் காதலிக்க முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் அர்ஜுன் அவ்வப்போது அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் அந்த பெண் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு போய் கொண்டிருந்த போது அவரை அர்ஜுனும் அவருடைய நண்பர் ஜேம்ஸும் வழிமறித்தனர். அப்போது மீண்டும் ஒருமுறை தன்னை காதலிக்குமாறு அர்ஜுன் கேட்டாராம்.

அப்போதும் அந்த பெண் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் தனது கையில் இருந்த பெட்ரோல் எடுத்து அந்த பெண்ணின் மீது ஊற்றிவிட்டு, அப்போதும் தன்னை காதலிக்குமாறு கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த வழியாக ஆட்கள் நடமாட்டத்தை அறிந்ததும் அர்ஜுனும் ஜேம்ஸும் தப்பியோடிவிட்டனர். அந்த பெண்ணின் புகாரை அடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+