அதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி
சென்னை: சென்னையில் சொந்த ஆட்டோவை ஆட்டோ ஓட்டுநர் தீ வைத்துக் கொளுத்திய விவகாரத்தில் அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். அத்துடன் ஆட்டோவை கொளுத்திய நபருக்கு ஆட்டோ வாங்க உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்தார்.
சென்னை அண்ணாநகரில் தாண்ட முத்து என்பவர் தனது ஆட்டோவின் எப்சியை புதுப்பிக்க சனிக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அவரை அதிகாரிகள் அலைக்கழித்ததால் அவர் மனம் உடைந்தார். அங்கு திடீரென மன விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தனது ஆட்டோவை தீ வைத்துக் கொளுத்தியதுடன் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் அவரைக் காப்பாற்றினார்கள்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுநர் தாண்ட முத்துவை தனது இல்லத்திற்கு நேரடியாக வரச்சொல்லி புதிய ஆட்டோ வாங்க நிதியுதவி அளித்தார்.

அதிகாரிகள் மீது புகார்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இப்போது நாம் பார்ப்பது ஒரே ஒரு தாண்ட முத்து தான். ஆனால், எத்தனையோ தாண்ட முத்துக்கள் தமிழகமெங்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். சாதாரண மனிதர்களை மிரட்டி பணம் பார்ப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அதிமுக ஆட்சி அனைத்து துறைகளிலும் கரப்ஷன் கமிஷன் என்ற நிலையில்தான் சென்று கொண்டிருக்கிறது.

அமைச்சர் வழக்கு
தமிழகத்தில் ஏராளமான மருத்துவர்கள் இறந்திருப்பதாக நான் கூறியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மறுக்கிறார். ஆனால் மருத்துவர்களின் இறப்பு எண்ணிக்கையை மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. நான் சொன்னது பொய் என்றால் அமைச்சர் என் மீது வழக்கு தொடுக்கட்டும் பார்க்கலாம் .

சாக்லேட் பாய்
இ பாஸ் வழங்குவதில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுவதால் அதை ரத்து செய்ய வேண்டும். நான் தூத்துக்குடி சென்றதற்கு இ பாஸ் பெறவில்லை என்று கூறுகிறார்களே அப்படியென்றால் என் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லையே ஏன? ஜெயக்குமார் என்னை, சாக்லேட் பாய் என்று கூறிகிறார். அது கெட்ட வார்த்தையில்லை. ஆனால் அதைச் சொல்பவர் ஒரு ப்ளே பாய் " இவ்வாறு கூறினார்.

முதல்வர் பிடிவாதம்
திமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் முறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட்டித்து வருவதாகவும், முதலில் இந்த இ-பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இ-பாஸ் முறை தேவையில்லை என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட காரணத்தினால், இ-பாஸ் தொடரும் என முதல்வர் எடப்பாடி பிடிவாதம் பிடிப்பதாகவும் உதயநிதி கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications