உமா ஆனந்தன் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தை! அதுதாங்க தமிழக அரசு! மாமன்ற கூட்டத்தில் கவனிச்சிங்களா!
சென்னை: வழக்கமாக மாமன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பேச தொடங்கினாலே, சலசலப்பு ஏற்படும். ஆனால், இன்று அவர் பேசிய வார்த்தைகள் அனைத்து கவுன்சிலர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மாமன்ற கூட்டத்தில் உமா ஆனந்தன் பேச தொடங்கினாலே, நாலாபுறமும் இருந்து எதிர்க் கருத்துக்களும், விமர்சனங்களும் வர தொடங்கிவிடும். இப்படி இருக்கையில், இன்று உமா ஆனந்தனின் பேச்சுக்கு திமுகவினரே வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள்.

என்ன நடந்தது மாமன்ற கூட்டத்தில்?
"எனது வார்டு மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதியில் 80%-ஐ நான் நிறைவேற்றிவிட்டேன் என்று பெருமையுடன் கூறுகிறேன். அந்த பெருமை உங்களையும் சேரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி சொன்ன உமா ஆனந்தன்
நான் பாஜகவை சேர்ந்தவர், எனவே இவருக்கும், இவர் பொறுப்பில் இருக்கும் வார்டுக்கும் எதையும் செய்யக்கூடாது என்று நினைக்காமல் அனைத்தையும் செய்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
ஒத்துழைப்பு இருக்கு
இதனையடுத்து மாமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் பேசியது பொய் கிடையாது. உண்மையைதான் சொன்னேன். எனது பகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதியில் 80% -ஐ நிறைவேற்றிவிட்டேன். இப்போது இருக்கும் ஆளும் கட்சி எனக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் என்னால் இதை செய்திருக்க முடியாது.
ஆலோசனை கூட கெட்பேன்
எனவே இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. நான் என்னுடைய பணியை செய்ய எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. விசிக, மதிமுக என அனைத்து கட்சியினரும் கட்சி பேதமின்றி என்னிடம் பழகினார்கள். மாமன்றத்தில் கூட நான் மற்ற கட்சியின் கவுன்சிலர்களிடம் ஆலோசனை கேட்பதுண்டு. நான் முதல்முறை கவுன்சிலர். ஆனால், மற்ற கட்சியினர் அப்படியல்ல. எனவே அவர்களிடம் நான் ஆலோசனை கேட்டிருக்கிறேன்.
நான் கேட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. முன்பெல்லாம் மேற்கு மாம்பலம் பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்சனை இருந்தது. இந்த முறை ஒரு இடத்தில் கூட மழைநீர் தேங்கவில்லை" என்ற கூறியிருக்கிறார்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. சென்னையில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. லிஸ்ட் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம்












Click it and Unblock the Notifications