மணலியில் மது குடித்து கொண்டே "ரொமான்ஸ்".. சில நிமிடத்தில் கள்ளக்காதலன் செய்த காரிய.. ஆடிப்போன சென்னை
சென்னை: சென்னையில் கள்ளக்காதல் தொடர்பான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. இது சம்பந்தமான வழக்குகளும் பதிவாகி நடந்து வரும் சூழலில், மணலி பகுதியில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். என்ன நடந்தது மணலியில்?
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 32 வயதான பிரியங்கா.. இவரது கணவர் பெயர் செல்வந்தர்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்..

ஆரம்பத்தில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், திடீரென இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வெடித்தது.
தண்ணி அடித்த கள்ளக்காதலர்கள்
இதனால் அடிக்கடி தகராறுகள் வலுக்கவும் தம்பதி இருவரும் பிரிந்துவிட்டனர்.. 2 குழந்தைகளுடன் 2 வருடங்களாக தனியாகவே வாழ்ந்து வருகிறார் பிரியங்கா.. இந்த நேரத்தில்தான், நெற்குன்றத்தைச் சேர்ந்த 34 வயதான கோவிந்தராஜ் என்ற நபருடன் பிரியங்காவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ள உறவாக வளர்ந்தது..
ஒருகட்டத்தில் கள்ளக்காதலர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.. எனினும் சமீப நாட்களாகவே கள்ளக்காதலர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. இதனால் தகராறுகள், சண்டைகள் வந்துள்ளன.. இறுதியில் பிரியங்கா மீது கோவிந்தராஜுக்கு வெறுப்பும், ஆத்திரமும் அதிகமாகி, அவரை கொலை செய்துவிடலாம் என்ற முடிவையும் எடுத்துள்ளார்... அதற்கான நாளையும் குறித்தார் கோவிந்தராஜ்.
மது பாட்டிலை எடுத்து
சம்பவத்தன்று பிரியங்காவிடம் நைசாக பேசி, மணலி பகுதியில் அழைத்து சென்றிருக்கிறார் கோவிந்தராஜ்.. அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள்.. அப்போது மறுபடியும் கள்ள ஜோடிக்குள் வாக்குவாதம் வெடித்துள்ளது.
ஏற்கனவே கடுப்பில் இருந்த கோவிந்தராஜ், பிரியங்காவின் பேச்சில் மேலும் ஆத்திரமடைந்து, மது பாட்டிலால் பிரியங்காவின் கழுத்தை அறுத்துள்ளார்.. இதனால் ரத்த வெள்ளத்திலேயே பிரியங்கா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
பிரியங்காவுடன் எதற்காக தகராறு
இதற்குபிறகு கோவிந்தராஜ் நேரடியாக வியாசர்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்து விட்டார்.. இதையடுத்து, மணலி போலீசார் இது தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. கோவிந்தராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லி உள்ளனர்..
உண்மையிலேயே பிரியங்காவுக்கும் கோவிந்தராஜூக்கும் என்ன தகராறு, எதற்காக கொலை வரை சென்றது என்று தெரியவில்லை. கோவிந்தராஜ் வாக்குமூலம் தந்தால்தான் உண்மை வெளியே வரும்.
விழிப்புணர்வு அவசியம்
எனினும், சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும், கள்ளக்காதல் பின்னணியில் நிகழும் வன்முறைகள், மேலும் கவலையை உருவாக்கியுள்ளது... கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீண்டநாள் பிரச்சனைகள், பொறாமை, சந்தேகம் போன்றவை வன்முறைக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளாக உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்..
பிரச்சனைகள், பிரிவு, புதிய உறவுகள் ஆகியன உருவாக்கும் மன அழுத்தங்களைப் பற்றி பலருக்கும் சரியான ஆலோசனைகள், உதவி சேவைகள் கிடைக்காததே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என்றும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வு குறைவு மற்றும் ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாத மனநிலை சமூகத்தில் பெரும் ஆபத்துகளை உருவாக்குவதாகவும் எச்சரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
-
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு











Click it and Unblock the Notifications