யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்த மனு.. 8 வாரத்தில் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரும் மனுவை, 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூபிஎஸ்சி தேர்வு ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் முதல் நிலை தேர்வு எழுதுகின்றனர். 2 லட்சம் பேர் வரை தேர்வாகி முதன்மைத்தேர்வு எழுதுகின்றனர். இறுதியில் 3000 பேர் வரை தேர்வாகி அதில் நேர்முதத்தேர்வில் 900 சிவில் பேர் ஆட்சிப்பணி அதிகாரிகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் என இந்தியா முழுவதும் ரேங்க் அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.

UPSC exams in regional language plea: MHC asks Union to reply in 8 weeks

ஆட்சிப்பணி என்பதால் ஆங்கிலம் அவசியம் என்பதால் ஆங்கிலத்தில் தேர்வு, நேர்முகத்தேர்வு நடக்கிறது. தாய்மொழியில் எழுதினாலும் பல பேப்பர்கள் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை.

இந்த நிலையில்தான், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டுமெனவும் இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருந்தது

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக எடுத்துரைத்தார்

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதால், அலுவல் மொழியான ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படுவதாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மனுதாரர் புதிதாக கோரிக்கை மனு அளிக்குமாறும், அதனை 8 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+