மீண்டும் இந்தி திணிப்பு? UPSC முதல்நிலை தேர்வு - சென்னையில் இந்தி மொழியில் வழிகாட்டு நெறிமுறைகள்!
சென்னை: சென்னையில் UPSC முதல்நிலை தேர்வு நடைபெறும் மையத்தில் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்தி மொழியில் ஒட்டப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயரிய பதவிகளுக்கு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் கடந்த 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று பல்வேறு தேர்வு மையங்களில் எழுத்து முறையில் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில் 69 மையங்களில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை யு.பி.எஸ்.சி. தேர்வு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 24,364 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு - முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலை தேர்வு தகுதித் தேர்வு ஆகும். அதில் தேர்ச்சி பெறும்பட்சம் முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகப்பெரிய சவால்.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடந்து வரும் நிலையில் சென்னை மண்ணடியில் UPSC முதல்நிலை தேர்வு நடைபெறும் மையத்தில் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்தி மொழியில் ஒட்டப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ், ஆங்கிலத்தில் இல்லாமல் இந்தி மொழியில் வழிகாட்டு நெறிமுறைகள் ஒட்டப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதனை புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications