ஒரு நிமிஷம்.. ரயில் டிக்கெட் எடுக்க UTS ஆப்ல ரீசார்ஜ் பண்றீங்களா? இன்று முதல் அமலுக்கு வந்த மாற்றம்!
சென்னை: அனைத்து ரயில் சேவைகளுக்கும் இனி 'ரயில் ஒன்' (RailOne) செயலியை பயணிகள் பயன்படுத்தலாம் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், சீசன் டிக்கெட், நடைமேடை அனுமதி சீட்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் இந்த புதிய செயலி அமல்படுத்தப்பட்டுள்ளது. பி.என்.ஆர். நிலை அறிதல், டிக்கெட் ரத்து, பயண விவரங்கள் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் ரயில் ஒன் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மார்ச் 1ம் தேதி முதல் யூ.டி.எஸ். (UTS) செயலி பயணிகள் பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு யூ.டி.எஸ். செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த செயலியின் மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் உள்ளிட்டவை பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், யூ.டி.எஸ். செயலியின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து 'ரயில் ஒன்' என்ற புதிய செயலியை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்திய ரயில்வே
தற்போது அந்த செயலியை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வருகிற 1ம் தேதி முதல் யூ.டி.எஸ். செயலி செயலிழக்கச் செய்யப்படும். முதற்கட்டமாக புதிய சீசன் டிக்கெட் பெறுவது, சீசன் டிக்கெட் புதுப்பித்தல், புதிய பயனர் பதிவு ஆகிய சேவைகள் நிறுத்தப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து பிளாட்பாரம் டிக்கெட் பெறுவது, பதிவு செய்த பயணிகளின் ஆர்-வாலட் கணக்கை ரீசார்ஜ் செய்வது போன்ற வசதிகளும் படிப்படியாக நிறுத்தப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் முழுமையடையும் வரை யூ.டி.எஸ். செயலி பிளே ஸ்டோரில் இருந்தாலும், அதன் சேவைகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர் வாலட்
ஆர்-வாலட் வசதி தினசரி பயணம் செய்யும் மின்சார ரயில், பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயன்படும் ஒன்றாக இருந்து வந்தது. இதில் பயணிகள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்து, பிரிபெய்ட் முறையில் டிக்கெட் பதிவு செய்து வந்தனர். யூ.டி.எஸ். செயலியில் உள்ள ஆர்-வாலட் தொகை, ரயில் ஒன் செயலிக்கு மாறும் போது அப்படியே மாற்றம் செய்யப்படும் என்றும், அந்த தொகையை புதிய செயலியில் பயணிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரயில் ஒன்
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ள 'ரயில் ஒன்' செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை அனுமதி சீட்டு, சீசன் டிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் எந்த ரயில் எந்த நேரத்தில் வருகிறது, எந்த நிலையங்களில் நிற்கிறது, இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்கள் எவை என்பதையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.
ரயில்வே மாற்றம்
இதனுடன், ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் இருந்தபடியே காலை, மதிய மற்றும் இரவு உணவை ஆர்டர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆர்-வாலட் மூலம் பணம் சேமித்து மின்னணு பரிமாற்றம் செய்யலாம். டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் பணத்தை திரும்ப பெறுவதும் மிகவும் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 'ரயில் மதாத்' என்ற பிரிவின் மூலம் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக பதிவு செய்ய முடியும்.
ரயில் டிக்கெட்
இந்த செயலியில் பயணிகள் தங்களது பெயர், புகைப்படம் மற்றும் ஆதார் விவரங்களை இணைத்து சீசன் டிக்கெட் பெற முடியும். முன்பதிவில்லாத டிக்கெட் பெற, ரயில் நிலையத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தாலே உடனடியாக டிக்கெட் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. ஒருமுறை பயணிகள் விவரங்களை சேமித்து வைத்தால், ஒவ்வொரு முறையும் தகவல்களை மீண்டும் நிரப்ப தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து பயணிகளும் யூ.டி.எஸ். செயலியிலிருந்து 'ரயில் ஒன்' செயலிக்கு உடனடியாக மாறி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications