Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் ரவி எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார்? - வைகோ காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவத்துடன் அக்கிரமத்துடன் பேசியுள்ளார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். நிலுவை மசோதா தொடர்பாக ஆளுநர் அளித்த புதிய விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைப் பணிகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது பேசிய ஆளுநர், சட்டசபையில் எந்த தீர்மானம் வேண்டும் என்றாலும் நிறைவேற்றலாம். ஆனால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாகாது.

Vaiko criticizes that Governor RN ravi speaks arrogantly about sterlite

தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறுகிறது. சட்ட மசோதா நிலுவையில் உள்ளது என்றால் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம் எனப் பேசினார்.

மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு இதற்காக பல கோடி ரூபாய் நிதி நம் நாட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. கூடங்குளம் அணு உலை வரும் போதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்களை தூண்ட இதுபோன்ற நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனப் பேசியுள்ளார்.

Vaiko criticizes that Governor RN ravi speaks arrogantly about sterlite

ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ ஆளுநரின் பேச்சைக் கண்டித்துள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவத்துடன் அக்கிரமத்துடன் பேசியுள்ளார் என வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழ்நாடு ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகாரத் திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் ஆளுநர்.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள், நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன.

சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+