போதை இளைஞர்களை அடித்து உதைத்த மதிமுகவினர்.. வருத்தம் சொன்னார் வைகோ

மதிமுகவினரின் செயலுக்காக வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதை இளைஞர்களை தன் கட்சியினர் அடித்து உதைத்தற்காக வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

மதுரை செல்வதற்காக வைகோ நேற்று சாயங்காலம் மெட்ரோ ரெயில் மூலமாக சென்னை ஏர்போட்டுக்கு சென்றார்.

அப்போது வைகோவுடன் அவரது கட்சிக்காரர்களும் மெட்ரோ ரயிலில் கூட வந்தார்கள். ஏர்போட் சென்றவுடன் வைகோ தன்னுடன் வந்தவர்களுடன் அங்கிருந்த லிப்டில் ஏற சென்றார்.

கோபத்தில் மதிமுகவினர்

கோபத்தில் மதிமுகவினர்

அந்த சமயத்தில் 2 இளைஞர்கள் வைகோவுடன் நின்றிருந்தவர்களை இடித்து தள்ளிவிட்டு லிப்ட்டில் ஏற வந்தனர். அந்த 2 பேரும் தண்ணி அடித்து இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்ததும் வைகோ, லிப்ட்டில் இருந்து இறங்கிவிட்டு நடந்து செல்ல ஆரம்பித்தார். வைகோ நடந்து செல்வதை பார்த்த மதிமுகவினருக்கு கோபம் வந்துவிட்டது.

வைகோவிடம் புகார்

வைகோவிடம் புகார்

அதனால் ஆத்திரம் தாங்காமல் போதையில் இருந்த அந்த 2 நபர்களை அடித்து உதைத்தார்கள். இருவருக்குமே வலி தாங்க முடியவில்லை. அதனால் அலறி துடித்து இருவரும் வைகோவிடம் ஓடினார்கள். தங்களை இப்படி போட்டு அடிக்கிறார்கள் என்று புகார் பண்ணினார்கள்.

இப்படித்தான் அடிப்பதா?

இப்படித்தான் அடிப்பதா?

இதனால் வைகோ, அந்த இளைஞர்களிடம் தனது வருத்தத்தை சொன்னார்.அதோடு கூட இருந்த தன் கட்சியினரையும், இப்படித்தான் அடிப்பதா என கடிந்து கொண்டார்.

ஏர்போர்ட்

ஏர்போர்ட்

கட்சிக்காரர்களை வைகோ திட்டியதை அந்த இளைஞர்கள் பார்த்து கொண்டே நின்றார்கள். உடனே வைகோ அந்த இளைஞர்களிடம், தண்ணி அடிப்பதை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் ஏர்போர்ட்டில் கொஞ்ச நேரத்துக்கு பரபரப்பாகி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+