அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம்–அய்யா கலாம் - வைரமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம் அய்யா கலாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவுநாள் கவிதையை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

அப்துல் கலாமின் நினைவுநாளை ஒட்டி வைரமுத்துவின் கவிதை:
கடல்மீனளந்த குடும்பத்தில்
விண்மீன் அளந்ததும்
ராமேஸ்வரத்தின் சந்திலிருந்து
பால்வீதிவரை பயணமுற்றதும்
இந்தியாவின் பெரியவீட்டில்
ஒரு பிரம்மச்சாரியாய்த் தனிமை காத்ததும்
பெருமையல்ல
அரசியல் ஆழி சூழ்ந்தும்
உப்புக்கறை படியாமல் கரையேறினீரே
அதுதான் அய்யா உங்கள் பெருமை
சலாம்-அய்யா
கலாம்.
இவ்வாறு வைரமுத்து எழுதியுள்ளார்.













Click it and Unblock the Notifications