முதலமைச்சரே நீங்க தலையிடுங்க! அப்பத்தான் ஒரு தீர்வு கிடைக்கும்! வானதி சீனிவாசன் வேண்டுகோள்!
சென்னை: ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி கற்பதில் சிக்கல்கள் இருப்பதால், முதலமைச்சர் தலையிட்டு இவ்விவகாரத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், உயர்கல்வித்துறை தொடர்பான இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
அதன் விவரம் வருமாறு;

ஆட்டிசம்
''ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி பெற, கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். படிக்க விரும்பும், படிக்கும் தகுதி கொண்ட எந்தவொரு மாணவருக்கும், எந்தக் காரணத்தைக் கொண்டும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக் கூடாது. இதில், பெற்றோர்களின் வலியை அரசு உணர வேண்டும்.''

உயர் கல்வித்துறை
''எனவே, தமிழக உயர் கல்வித் துறையும், தமிழக முதல்வரும் இதில் உடனடியாக தலையிட்டு ஆட்டிசம் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களைய வேண்டும். அவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை தேவையான இடங்களில் உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு கூறியிருக்கிறார்.''

வானதி வேண்டுகோள்
மத்தியில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், உயர்கல்வித்துறை தொடர்பான இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே இவர் முன் வைத்துள்ள இந்தக் கோரிக்கையானது நியாயமானதாக பார்க்கப்படுகிறது.
Recommended Video

செலக்டிவ் அம்னீசியா
இப்படி ஒரு பக்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தாலும் கூட மற்றொரு பக்கம் திமுகவை கடுமையாக சீண்டியுள்ளார் வானதி சீனிவாசன். திமுகவுக்கு செலக்டிவ் அம்னீசியா உள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், உதய்பூர் டெய்லர் கொலை விவகாரத்தில் எதுவுமே நடக்காதது போல் திமுக மவுனமாக இருப்பது ஏன் என அவர் வினவியுள்ளார்.












Click it and Unblock the Notifications