Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திமுக + பாஜக".. என்ன நடக்கிறது தமிழகத்தில்?.. "அவர்" சொல்வது சரி என்கிறாரே வானதி.. அப்படின்னா?

சேகர்பாபுவின் கருத்துக்கு பாஜகவின் வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் சேகர்பாபுவின் கருத்தை, பாஜகவின் வானதி சீனிவாசன் வரவேற்றுள்ளார்.. தமிழக அரசுக்கு மறைமுகமாக பாராட்டும் தெரிவித்துள்ளார்.. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டினப்பிரவேசம் விவகாரம் தலைதூக்கியது.. முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆதினங்கள், இந்து அமைப்புகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தருமபுர ஆதின பட்டின பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அரசின் இந்த அனுமதியை திராவிட கழகத் தலைவர் வீரமணி கடுமையாக விமர்சித்திருந்தார்... சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுக்கும் முடிவுகள் ஒருகட்டத்தில் இந்து அமைப்புகள் அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக வாய்ப்பாக அமைந்துவிடும் என்று எச்சரித்திருந்தார்.

 ஆன்மீக அரசு

ஆன்மீக அரசு

ஆனால், இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஒரு பேட்டி தந்திருந்தார்.. "இது அனைவருக்குமான அரசு.. பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கவில்லை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது.. ஆத்திகர்- நாத்திகர் என அனைவருக்குமான அரசாக தமிழக அரசு உள்ளது" என்றார்.

 பட்டினப்பிரவேசம்

பட்டினப்பிரவேசம்

ஏற்கனவே பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி தந்ததன் மூலம், திமுக அரசு பணிந்துவிட்டது என்று பலரும் விமர்சித்திருந்த நிலையில், ஆத்திகர் - நாத்திகர் என அனைவருக்குமான அரசாக தமிழக அரசு உள்ளது என்று சேகர் பாபு கூறியிருந்ததும், கிட்டத்தட்ட பொதுவான பொருளையே உணர்த்துவதாக இருந்தது.. அதேபோல, நேற்றைய தினம் சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகர் பாபு, அன்னை தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமில்லை, வாய்ப்புள்ள இடங்களில் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

 வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

ஆரம்பத்தில் கறார் தன்மையுடன் சொல்லிவிட்டு, இப்போது தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை என்று அமைச்சர் சொன்னது, பரவலாக விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.. சேகர்பாபு சொன்ன இந்த கருத்தைதான் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வரவேற்றுள்ளார்.. பாராட்டியும் உள்ளார்,.. தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னதாவது:

 தமிழில் அர்ச்சனை

தமிழில் அர்ச்சனை

"இறைவனை வணங்க மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.. அதேசமயம், எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் உரிமை சார்ந்தது.. ஏற்கனவே கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டு உள்ளது.. பக்தர்கள் விரும்பினால் தமிழிலும் அர்ச்சனை செய்து கொடுக்கின்றனர்.. தமிழில் மட்டுத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று யாரையுமே வற்புறுத்த முடியாது.. மக்களாக விரும்பி ஏற்றுகொள்ளாத வரை இதை அமல்படுத்துவது கடினம் என்று அமைச்சர் சேகர்பாபு சொல்லி இருப்பது சரியானதே..

அர்ச்சனை

அர்ச்சனை

இது பக்தர்களின் உணர்வு தொடர்பான விஷயம்.. தமிழில் அர்ச்சனை செய்ய கேட்டு, அதை செய்ய மறுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்... முதலில் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை தெரிவித்த அரசு இப்போது கட்டாயமில்லை என்று நிலைப்பாடு மாற்றம் செய்து இருக்கின்றதா? என்ற கேள்விக்கு, ஏதார்த்தம் என்ன என்பதை அரசு புரிந்து இருக்கின்றது.. தமிழில் இறைவனை வழிபட அனைத்தும் இருக்கின்றது.. அரசு மத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது என்பதை தமிழக அரசுக்கு மெல்ல புரிய துவங்கி உள்ளது" என்றார் வானதிசீனிவாசன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+