கேள்விக்குறியாகும் சென்னையின் சுற்றுச்சூழல்.. எரிவுலை திட்டத்தை கைவிட வேண்டும் - வானதி சீனிவாசன்
சென்னை: குப்பைகளை உரமாக்கும் மையங்களை மூடிவிட்டு எரிவுலைகளை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்றும், தலைநகர் சென்னையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மாநகரின் பல இடங்களில் குப்பை குவிந்து கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசி, மக்களுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் சென்னை மாநகரம், குப்பை நகரமாகி விடுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிக்குள் செயல்பட்டு வரும், மக்கும் குப்பையை உரமாக்கும் 168 மையங்களை மூட முடிவு செய்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. அது மட்டுமல்லாது, மக்காத கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்ய வாய்ப்புள்ள பொருட்களைப் பிரித்தெடுக்கும் 88 பொருள் மீட்பு வசதி மையங்களை (Material recover facility) மூடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கழிவு மேலாண்மை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். இது கண்டனத்திற்குரியது. உரமாக்கும் மையங்கள், பொருள் மீட்பு வசதி மையங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், அதை மூடும் முடிவை எடுத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நுர்நாற்றம் வீசுவதை தடுத்து, மக்களுக்கு பாதிப்பில்லாமல் இந்த மையங்களை செயல்படுத்துவது சிறந்த நிர்வாகத்தின் அடையாளம். அதைவிடுத்து, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, உரமாக்கல் மையங்களை மூடுவது, மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போன்றது.
மக்கும் குப்பையை உரமாக்குவதற்குப் பதிலாக, மூடிய அமைப்புக்குள், உயர் வெப்ப நிலையில் எரித்து சாம்பலாக்கும் எரிவுலைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் வெளிவரும் புகை சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கும். எனவே, குப்பையை எரிக்கும் எரிவுலை திட்டத்தை கைவிட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பையை உரமாக்கும் மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் நேரடியாக தலையிட்டு தலைநகர் சென்னையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications