Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோதிமணியை எதிர்க்க முடியாதா? அண்ணாமலை ஏன் கரூரில் நிற்கல? வானதி ஆட்கள் குமுறுறாங்களா? உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் அண்ணாமலை இருக்க ஏன் கோவைக்கு வருகிறார் என்று வானதி ஆட்கள் கேட்கின்றனர். வானதி ஆட்கள் கேட்கவில்லை என்று சொல்வீர்களா? அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். கட்சி கட்டுப்பாடு காரணமாக வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் தெரிந்தவர்களிடம் பேசுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Vanathi Srinivasan supporters are not happy with Annamalai contesting in Coimbatore says Priyan

ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கே கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.

ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படி இருக்கும்?: இந்த நிலையில் கோவையில் நிலவரம் எப்படி இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்., பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வில் கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி உள்ளது. உதாரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு ஒரு வேட்பாளர் சென்றாலே அந்த மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைகின்றனர். நம்ம மாவட்டத்தில் ஆள் இல்லையா என்று கேட்கின்றனர். வானதி ஆட்களே மனசுக்குள் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

கரூரில் அண்ணாமலை இருக்க ஏன் கோவைக்கு வருகிறார் என்று வானதி ஆட்கள் கேட்க்கின்றனர். வானதி ஆட்கள் கேட்கவில்லை என்று சொல்வீர்களா? அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். கட்சி கட்டுப்பாடு காரணமாக வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் தெரிந்தவர்களிடம் பேசுவார்கள். அவர் ஏன் தொகுதி மாறி போட்டியிடுகிறார்.

ஜோதிமணியை எதிர்க்க தைரியம் இல்லையா? என்று கேட்பார்கள். கோவைக்கு ஏன் வர வேண்டும். நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ. அவர் நிற்கவில்லையா? அதேபோல் வானதிக்கு கொடுக்கலாமே என்று தொண்டர்கள் கேட்கிறார்கள். சிபி ராதாகிருஷ்ணன் இல்லாத போது ஏன் வானதிக்கு கொடுக்கலாமே என்று தொண்டர்கள் கேட்கிறார்கள். அவர் உள்ளூரிலேயே விலை போகவில்லை.

அப்படி இருக்க எப்படி அண்ணாமலை கோவையில் இடம் கொடுக்கலாம் என்று கேட்கின்றனர். ஆனால் இது பாஜகவில் மட்டுமில்லை. இது போன்ற உட்கட்சி மோதல் எல்லா கட்சியிலும் உள்ளது. காங்கிரசில் கூட உள்ளது. திமுகவில் உள்ளது. ஒரு உதாரணத்திற்காக இங்கே பாஜகவை சொல்கிறேன் என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+