நடிகை வனிதா விஜயகுமாருக்கு எங்கிருந்துதான் பிரச்சினை வருமோ? கமிஷனர் அலுவலகம் போயிருக்காங்க!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சைதான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.
அப்படி வந்த ஒரு பிரச்சினைக்காக வனிதா விஜயகுமார், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் போய் புகார் அளித்துள்ளார். எதற்காக என்பதை பார்க்கலாம்.

நடிகர் விஜயகுமார்- நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா. இவர் சந்திரலேகா எனும் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். அதன் பிறகு மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் அவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இந்த திருமண விவகாரம் தோல்வியை கொடுத்ததால் அதிலிருந்து வெளியே வந்தார் வனிதா. தனது மகளை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.
ஆகாஷுடன் ஸ்ரீஹரி வளர்ந்தார். இந்த நிலையில் வனிதா, ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்தராஜனை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஜெய்னிதா என்ற மகள் உள்ளார். ஆனந்த ராஜனுடனும் வனிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் நடன இயக்குநர் ராபர்ட்டை இவர் திருமணம் செய்து கொள்வார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா திருமணம் செய்து கொண்டார். அவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். அவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு திரைத்துறையில் ஒரு கம்பேக் கொடுத்தார். மேலும் சமையல் நிகழ்ச்சிகளை கொடுக்கும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
விஜய் டிவியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். சில படங்களிலும் நடித்து வருகிறார். அவருடைய மகள் ஜோவிகாவும் இயக்குநராக முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் வனிதா Mrs & Mr எனும் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜோவிகா தயாரித்திருக்கிறார். படத்திலிருந்து ஒரு சிங்கிள் அண்மையில் வெளியானது. இந்த நிலையில்தான் சாட்டிலைட் உரிமைக்காக ரூ 40 கோடிக்கு வனிதா காசோலை கொடுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக தன்ராஜ் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வனிதா, தன்ராஜ் யாரென்றே எனக்கு தெரியாது. எனது கையெழுத்தை அவர் போலியாக போட்டு என் பெயரை கெடுக்கும் விதத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications