சிஎஸ்கே வெற்றி பெற பிரார்த்தனை.. வேண்டுதலை நிறைவேற்ற தயாராகும் நடிகை வரலட்சுமி! இன்று முதல்!
சென்னை: ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் வேண்டுதலை நிறைவேற்ற தயார் நிலையில் உள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடரில் ஒன்று ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளுக்கு வீரர்களை ஏலம் எடுக்கும் போதே சூடுபிடிக்கும். ரசிகர்களும் இந்த போட்டியை காண ஆவலுடன் காத்திருப்பர்.

எத்தனை அணிகள் இருந்தாலும் தோனி தலைமைலியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே பெரும்பாலான ரசிகர்கள் இருப்பார்கள். இந்தியாவுக்கு எங்கு மேட்ச் நடந்தாலும் ரசிகர்கள் சென்றுவிடுவார்கள். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதி போட்டியை விளையாடியது.
இந்த போட்டி கடந்த மே 28ஆம் தேதி தொடங்கியது. அகமதாபாத்தில் தொடங்கிய இந்த போட்டி 30ஆம் தேதி அதிகாலை 2 மணிக்குத்தான் முடிவடைந்தது. மழை காரணமாக அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு கடைசியாக ஓவர்கள் குறைக்கப்பட்டு இந்த போட்டி நடந்தது.
இந்த போட்டியில் குஜராத் அணி 214 ரன்களை எடுத்தது. இதையடுத்து மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியை காண நடிகை வரலட்சுமி, ரஜினி மகள் ஐஸ்வர்யா, நடிகர் சதீஷ், தயா அழகிரி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இதில் கடைசியாக சிஎஸ்கே வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டது.
அதாவது 2 பால்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த ஸ்டேடியத்தில் ஒரே அமைதி, சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அது போல் வீட்டில் இருந்தபடியே பார்த்த நிறைய பேரும் சமயபுரத்து ஆத்தா.. பாத்து செய்மா என்றெல்லாம் சாமியாடினர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தில் அத்தனை பீதி! அப்போது ஜடேஜா 2 பாலில் ஒரு பவுண்டரியையும் சிக்ஸையும் போட்டு தாக்கினார். உடனே அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளி குதித்தனர். ஸ்டேடியம் முழுக்க மஞ்சள் படையின் ஆர்ப்பரிப்பு இருந்தது. 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது.
அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் சென்றிருந்த நிலையில் சிஎஸ்கே வெல்ல வரலட்சுமி சரத்குமார் பிரார்த்தனை செய்துள்ளார். அதாவது 2 பாலில் 10 ரன்களை அடித்து சென்னை அணி கோப்பையை வென்றால் தான் அடுத்த ஒரு மாதத்திற்கு சைவமாக மாறிவிடுவதாக வேண்டியிருந்தாராம். அதன்படி ஒரு மாதத்திற்கு அசைவ உணவை தவிர்த்துவிட்டு சைவ உணவை சாப்பிட போகிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹாஹாஹா இனி நான் ஒரு மாதத்திற்கு சைவ உணவையே உட்கொள்வேன். பரவாயில்லை. எல்லாமே சிஎஸ்கேவுக்காகத்தானே என குறிப்பிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் சிஎஸ்கேவின் வெறித்தனமான ரசிகையா இருப்பாரோ வரு! என கேட்டு வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications