வாசன் ஐ-கேர் குழுமத் தலைவர் அருண் மறைவு... ப.சிதம்பரத்திற்கு ஆல் இன் ஆலாக திகழ்ந்த நபர்..!
சென்னை: இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் இயங்கி வரும் வாசன் ஐ கேர் குழுமத்தின் தலைவர் அருண் இன்று காலமானார்.
Recommended Video
40 வயதில் வாசன் ஐ கேர் என்ற பெயரில் திருச்சியில் கண் மருத்துவமனையை தொடங்கிய அருண், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தனது கிளைகளை ஆலமர விழுதாக பரவச்செய்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வலதுகரமாக திகழ்ந்த அருணுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாசன் மெடிக்கல்
கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக இருந்த முருகையா என்பவரின் மகன் தான் இந்த அருண். வாசன் குரூப் என்ற பெயரில் திருச்சியில் முருகையா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. திருச்சி கரூர் சாலையில் ஏபிசி ஹாஸ்பிடல் என்ற மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிறுவிய அருண், கண் மருத்துவத்திற்கென பிரத்யேகமாக வாசன் ஐ கேர் என்ற மருத்துவமனையை 2008-ம் ஆண்டு தொடங்கினார்.

இந்தியா முழுவதும்
ப.சிதம்பரத்திற்கு ஆல் இன் ஆலாக விளங்கிய அருணின் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்தது. ஒரு கட்டத்தில் கண் மருத்துவமனையை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து வரும் அளவுக்கு அருணின் செல்வாக்கு உயர்ந்தது. இந்தியா முழுவதும் 170 கிளைகளில் வாசன் ஐ கேர் செயல்பட்டு வரும் நிலையில் மாதம் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவு நடந்து வருகிறது.

வெளிநாடு
இப்படிப்பட்ட சூழலில் அருணுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமாகிவிட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் அருணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அருண் நிதி நெருக்கடியில் தவித்து வந்ததாகவும் இதன் காரணமாக சில மாதங்கள் அவர் வெளிநாடுகளில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பென்ஸ் கார்
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது திருச்சி வந்தால் அவருக்கு அருண் வீட்டில் இருந்து தான் பென்ஸ் கார் அனுப்பி வைக்கப்படும். ப.சிதம்பரத்தின் சொத்து விவரங்கள் பற்றி அருண் ஓரளவு நன்கு அறிந்து வைத்திருப்பவர். கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாளான இன்று அருண் மறைந்திருப்பது ப.சிதம்பரம் தரப்பிற்கு மிகுந்த சோகத்தை அளித்திருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications