6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகளுக்கு "செக்.." நாள் வேறு ரொம்ப கம்மி.. திருமாவளவன் பிளான் என்ன?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த தேர்தலில் பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்றுதான் சின்னம் உறுதியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.
வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகியவைதான் அந்த 6 தொகுதிகள்.

6 தொகுதிகள்
இதில் திருப்போரூர் தொகுதியில் பாமகவுடனும், பிற 5 தொகுதிகளில் அதிமுக உடனும் நேருக்கு நேராக களம் காண்கிறது விடுதலை சிறுத்தைகள். இந்த நிலையில்தான் சின்னம் ஒரு பெரிய பிரச்சினையாக உருமாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்கள் களத்தில் இருப்பவர்கள்.

திருமாவளவன் திட்டவட்டம்
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும் நாங்கள் எங்களது தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக தெரிவித்து விட்டார் திருமாவளவன். திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் இது பற்றி எவ்வளவோ வலியுறுத்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் திருமாவளவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

தனிச் சின்னம்
அதற்கு அவர் கூறிய காரணம் இரண்டு. விடுதலை சிறுத்தைகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை விரும்பியது. ஆனால் ஆறு தொகுதிகள் மட்டும்தான் திமுக ஒதுக்கியுள்ளது. பாஜக கூட்டணியை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுப்பதற்காக இந்த குறைந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ள சம்மதிக்கிறோம். ஆனால் எங்கள் கட்சியினரை சமாதானப்படுத்த வேண்டுமென்றால் நாங்கள் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அழுத்தந்திருத்தமாக கூறிவிட்டார் திருமாவளவன். அதேபோல, எங்கள் கட்சியின் தனித்துவத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு தனிச் சின்னம்தான் உதவும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவால் கடும் போட்டி
தேர்தல் களம் மிக எளிதாக இருக்கும் என்றும் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்பதும் விடுதலை சிறுத்தைகள் கணக்காக இருந்தது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பு மண்டலமாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் காவிரியில் பிரச்சினையில்லாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது உள்ளிட்டவற்றால் முதல்வர் மீது பெரிய அதிருப்தி அலை அங்கு இல்லை. எனவே விடுதலை சிறுத்தைகள் போட்டியிடக்கூடிய 6 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி, விடுதலை சிறுத்தைகளுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது.

முதல்வர் சுற்றுப் பயணம்
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருந்தனர். இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு அந்த கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எதிர்தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று மதியம் வரை எந்த சின்னமும் ஒதுக்கப்படாததன் காரணமாக மக்களிடம் எந்த சின்னத்தில் வாக்கு கேட்பது என்பதில் சுணக்கம் நிலவியது. மதியம்தான், பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. திமுக இதை கவலையோடு கவனித்து வந்ததாக கூறுகிறார்கள்.

இழுபறிக்கு பிறகு வெற்றி
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் தனி சின்னத்தில் அதாவது பானை சின்னத்தில் போட்டியிட்டார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ரவிகுமார் எளிதாக வென்று விட்ட நிலையில் திருமாவளவன் வெற்றி நள்ளிரவு வரை இழுபறியாக இருந்து. குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே, அதாவது 3120 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திருமாவளவன் வெல்ல முடிந்தது.

உதய சூரியன் சின்னம்
நேரடியாக திருமாவளவனே போட்டியிட்டும் இதுதான் நிலவரம். இதுதான் சின்னத்துக்கான முக்கியத்துவம். ஒருவேளை 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு தூரம் யோசிக்க தேவையிருந்திருக்காது. இன்னும் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கலாம். இப்போது சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிரமாக உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்றுதான் சின்னம் ஒதுக்கப்பட்டதால், குறைந்த கால அவகாசத்தில் அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பெரும் சுமை அவர்கள் முன்னால் இருக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் திருமாவளவனும் அறிந்திருப்பார். தெரிந்துதான், தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார். எனவே அதற்கான வியூகங்களை அவர் வைத்திருப்பார் என்று அடித்துச் சொல்கிறார்கள் அந்த கட்சியினர்.
-
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?! -
உடல் மெலிந்து.. 2 மாதத்திற்கு பின் அறிவாலயம் வந்த துரைமுருகன்! கைதாங்கலாக கூட்டிசென்ற பூச்சி முருகன் -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின் -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்!












Click it and Unblock the Notifications