ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு விசிகவில் புதிய பொறுப்பு.. திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: விசிக மாநில பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில், இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் விசிகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்களான ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோருக்கு மீண்டும் சீட் கொடுக்கவில்லை.

இதனால் விசிகவில் பல்வேறு நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நேரடியாக பேசி சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு கேட்டதாக விசிகவினரால் குற்றம்சாட்டப்பட்டது. இதனை திருமாவளவனும் ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் திருமாவளவனை வந்து நேரில் சந்திக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னரே விசிக அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்தனர். இதன்பின்னரே ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத சூழலில், விசிகவில் இவர்கள் இருவருக்கும் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் ஆளூர் ஷாநவாஸ்க்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விசிகவின் பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications