சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயல் பாதிப்பு... ரூ 10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் தொல். திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து ரூ.10 லட்சம் நிவாரண நிதியை விடுதவை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து திருமாவளவன் நிவாரண நிதியை வழங்கினார்.

கஜா புயல் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி குவிந்து வருகிறது. திமுக சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வழங்கியிருந்தார்.

vck president thirumavalavan presented 10 lakh rupees for gajacyclone relief fund

இன்று சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவியை அதன் உரிமையாளர் அருள் மற்றும் வர்த்தகர் சங்க பிரமுகர்கள் இன்று முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினர்.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில், ராம்கோ குழும நிறுவனத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமா ராஜா மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.ஏ.வி. தர்ம கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, "கஜா" புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

English summary
Thirumavalavan presented 10 lakh Relief Fund, Chief Minister Palanisamy met at the Greenways House in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X