முனுமுனுக்க வைக்குதே முருங்கை..1ஆம் தேதி வரைக்கும் தாங்குமா? பாக்கெட்டை பதம் பார்க்கும் காய்கறிகள்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட், பெரிய வெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும், முருங்கக்காய் 200 ரூபாய்க்கும் விற்பனையாவது இல்லத்தரசிகளை கவலை அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது மழையோடு, கடுமையான பனிப் பொழிவுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பனி மற்றும் மழைக் காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும். மேலும், சபரிமலை ஐயப்பன் சீசன் முடிந்து, தைப்பூசம் சீசன் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் பாதயார்த்திரை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
இதனால் இந்த காலங்களில் இறைச்சி விலை வெகுவாக குறையும் அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 220 ரூபாயாக குறைந்து இருக்கிறது. ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு. பனிப் பொழிவு மற்றும் பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய், கேரட், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
தற்போதைய சூழலில் ஒரு கிலோ பீன்ஸ் 90 ரூபாய்க்கும், பீட்ரூட் 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 80 ரூபாய்க்கும் முட்டைக்கோஸ் 65 ரூபாய்க்கும், கேரட் 80 ரூபாய்க்கும், இஞ்சி 100 ரூபாய்க்கும், மிளகாய் ₹80க்கும், தக்காளி 35 ரூபாய்க்கும், அதிகபட்சமாக பெரிய வெங்காயம் 105 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ பூண்டு 400 ரூபாய்க்கு அதிகபட்சமாக விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களாக உருளைக்கிழங்கு விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் 74 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கிலோ கணக்கில் காய்கறிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
இதே போல பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆப்பிள் 250 ரூபாய்க்கும், வாழைப்பழம் 130 ரூபாய்க்கும், பெரிய நெல்லிக்காய் 100 ரூபாய்க்கும், கொய்யா 110 ரூபாய்க்கும், திராட்சை 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications