சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய காய்கறி சந்தை- இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது
சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதால் சென்னையை அடுத்த திருமழிசையில் புதிய காய்கறி சந்தை இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. திருமழிசையில் இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கி ஜரூராக நடைபெற்று வருவது பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்ந்து இயங்கி வந்தது.
இதனால் லாக்டவுன் காலத்திலும் காய்கறி விலைகள் உயராமல் இருந்தது. விவசாயிகளும் ஓரளவு பாதிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

கோயம்பேடு சந்தை மூடல்
அத்துடன் கோயம்பேடு சந்தையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. அதேநேரத்தில் வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் கோயம்பேடு காய்கறி சந்தை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

திருமழிசை தற்காலிக சந்தை
இதையடுத்து சென்னை திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. இந்த காய்கறி சந்தை அமைக்கும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதில் காய்கறி கடைகள், அனைத்து தரப்பினருக்குமான குடிநீர், கழிப்பிட வசதிகள் அனைத்தும் துரிதகதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதிகாலை முதல் திறப்பு
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் திருமழிசை காய்கறி சந்தையில் விற்பனை தொடங்கியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், சி எம் டி ஏ. செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். இங்கு A,B,C,D என 4 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. இந்த காய்கறி சந்தைக்கு 450 லாரிகளில் 6000 டன் வரை காய்கறிகள் வந்துள்ளன. இன்று 50 கடைகள் மட்டும் இயங்கவில்லை.
Recommended Video

அமோக விற்பனை
இன்று மட்டும் சுமார் 3000 டன் காய்கறிகள் ரூபாய் 60 லட்சத்திற்கு விற்பனை ஆகி உள்ளதாக கோயம்பேடு மார்கெட் முதன்மை அதிகாரி கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திருமழிசை சந்தை தொலைவில் அமைந்துள்ளதால் அதிகாலையிலேயே சென்னையைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கிச் சென்று விட்டனர். தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர் பூந்தமல்லி, உள்ளிட்ட சுற்று பகுதியில் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் வியாபாரம் நடத்தப்பட்டது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications