தேவயானி முதல் AK 47 கமாண்டோ படை வரை.. மகளிர் உரிமை தொகையை வைத்து.. ஸ்டாலின் சொன்ன மெசேஜ்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் திட்டம் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் இன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுக்க மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 17 லட்சம் பெண்களுக்கு இன்று மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் மூலம் பணம் அனுப்பப்பட்டது. இன்று மாலைதான் இதற்கான விழா நடந்தது என்றாலும் கூட காலையிலேயே பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது.

பயனாளிகள் எல்லோருக்கும் காலையிலேயே பணம் அனுப்பப்பட்டுவிட்டது. ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 1.3 கோடி பெண்களுக்கு பணம் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் விரிவாக்கம் இன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு இன்று பணம் அனுப்பப்படுகிறது.
வெல்லும் தமிழ்ப் பெண்கள்
மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் திட்டம் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சியில் என்ற பெயரில் இன்று நடத்தப்பட்டது. இதில் இன்று நடிகை தேவயானி, பல பிரபலங்கள், ஏகே 47ஐ கையாளும் கமாண்டோ பெண் படையினர், அரசியல் பெண் பிரபலங்கள், உள்ளூர் அளவில் அதிகாரத்தில் உள்ள பெண்கள் பலரும் இடம்பெற்று இருந்தனர்.
பெண்களுக்கு முக்கியத்துவம்
இந்த நிகழ்வு முழுக்க முழுக்க பெண்களை கவரும் விதமாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. கடந்த தேர்தல்களில் மகளிர் உரிமை தொகை பெரிய அளவில் கவனம் பெற்றது. தேர்தல் முடிவுகளை மாற்ற காரணமாக இருந்தது. பெண்கள் வாக்குகள் பெரிய அளவில் தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலையில்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இன்று வெல்லும் தமிழ்ப் பெண்கள் திட்டம் நடத்தப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் பெண்கள் வாக்குகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த நிகழ்விற்கு இன்று அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இன்று பணம் அனுப்பப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இச்செய்தி, அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13ம் தேதி முதல் உதவித்தொகை கிடைக்கும் என்றும் தெரிவித்தது. அதன்படியே இன்று காலை அவர்களுக்கு பணம் அளிக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகை - மேல்முறையீடு
விண்ணப்பித்த அனைவருக்கும், விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் குறுஞ்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்படும். இது, விண்ணப்பதாரர்கள் குறைகளை அறிந்து, மேல்முறையீடு செய்வதற்கு முன் சரிசெய்ய உதவும்.
மேல்முறையீடு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதி மகளிர் நலத் தனி வட்டாட்சியரை அணுகலாம். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டைச் செய்ய வேண்டும். நிராகரிப்புச் செய்தியுடன் சென்று, அதிகாரியின் அறிவுரைகளைப் பின்பற்றவும்.
எப்படி மேல்முறையீடு செய்வது?
மேல்முறையீட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரின் சீராய்வுக்கு அனுப்பப்படும். அதிகாரிகள் ஆவணங்களை மீண்டும் சரிபார்த்து, விண்ணப்பதாரரின் தகுதியை முடிவு செய்வார்கள். சிறுபிழைகள் அல்லது ஆவண முரண்பாடுகளால் தகுதியான பெண்கள் யாரும் விடுபடாமலிருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக, இ-சேவை மையங்கள் மூலமாகவும் மேல்முறையீடுகளை சமர்ப்பிக்க அரசு வழிவகை செய்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியாத பெண்கள், தங்கள் அருகிலுள்ள மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழக அரசின் முக்கிய நலத்திட்டம். இந்த மேல்முறையீட்டு அமைப்பு, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் திட்டப் பலனைச் சிரமமின்றி பெறுவதை உறுதி செய்கிறது. விண்ணப்ப நிலை குறித்த முக்கிய குறுஞ்செய்திகளைத் தவறவிடாமல் இருக்க, கைபேசி எண்களை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications