மருத்துவத்துறையில் அரசு லாப நட்டக் கணக்குகளை பார்த்தால் வேலைக்கு ஆகாது! வேல்முருகன் அட்வைஸ்!
சென்னை: மருத்துவத்துறையில் அரசு லாப நட்டக் கணக்குகளை பார்த்தால் வேலைக்கு ஆகாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அட்வைஸ் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தங்களது வாழ்வை, மூன்று ஆண்டுகளாக அர்ப்பணித்த ஒப்பந்த செவிலியர்களை, கடந்த 31.12.2022 அன்று தமிழ்நாடு அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது, காலிப்பணியிடம் 3,300 இருந்த நிலையில், 3,290 தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அக்கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்தது.

கடந்த 2021, தேர்தல் வாக்குறுதி 356ல், ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறிய நிலையில், அதனை மீறி தமிழ்நாடு அரசு நடந்து கொண்டது வேதனை அளிப்பதாக, அப்போதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டி இருந்தது.
மூன்று ஆண்டுகள் பணி செய்த தங்களை மீண்டும் பணி அமர்த்தி, நிரந்தரம் செய்ய வேண்டும் என எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. இது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை அச்சங்கம் முன்னெடுத்ததின் விளைவாக, அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.
அதே சமயம், மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம், தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதனையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை.
இதன் காரணமாக, எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் சங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கில், பாதிக்கப்பட்ட எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்கள் உரிய தேர்வு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அதனால், செவிலியர்களுக்கு 6 வாரத்தில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 12.07.2023 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உயர்நீதிமன்ற உத்தரவினை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி மீண்டும் பணி கிடைத்து விடும் என நம்பியிருந்த செவிலியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா போன்று எதிர்காலத்தில் புதிய கொடிய நோய்கள் அலை அலையாகவும் புதிய பரிணாமம் எடுத்து இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள், சூழலியாளர்கள் கூறி வரும் நிலையில், மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை வேலையை விட்டு தூக்கியெறிவது என்பது பெரும் அபத்தான போக்காகும்.
அதுமட்டுமின்றி, மக்களுக்கான மருத்துவத்தை புறக்கணிப்பதுடன் மக்களை தனியார் மருத்துவக் கொள்ளைக்கு தள்ளிவிடுவதாகும். மருத்துவ சேவையில் இலாப நட்டக் கணக்குகளை அரசு பார்த்து கொண்டிருந்தால், எதிர்காலத்தில் பெரும் மக்கள் உயிர்சேதத்தை சந்திக்க நேரிடும்.
எனவே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பணியிலிருந்து நீக்கப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications