பாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பரபரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்!
சென்னை: பாமகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் வேலைகள் பாமகவில் வேகம் பிடித்துள்ளன. தீரனைத் தொடர்ந்து மேலும் பலர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
திமுக, அதிமுக தவிர்த்து, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரு கட்சிகள், தாக்கத்தை ஏற்படுத்திய இரு கட்சிகள் என்றால் அது பாமக மற்றும் தேமுதிகதான். இரண்டு கட்சிகளுமே தாறுமாறான மக்கள் செல்வாக்கையும், பட்டாஸ் கிளப்பிய தளபதிகளையும் பெற்ற தெறியான அரசியல் கட்சிகள்.
ஆனால், தேர்தல் அரசியலில் பெரும் தோல்விகளை இவ்விரண்டு கட்சிகளுமே சந்தித்து வருகின்றன. இதில் பாமக பரவாயில்லை. தேமுதிக நிலைதான் படு மோசம் என்பதிலிருந்து ரொம்ப ரொம்ப மோசம் என்ற நிலைக்குப் போய்க் கொண்டுள்ளது.

ராமதாஸ் மும்முரம்
அதேவேளையில் இந்த இரண்டின் தலைமைகளில், ‘கட்சியை மீட்டெடுக்கணும்' எனும் எண்ணம் இருப்பது டாக்டர் ராமதாஸுக்கு மட்டுமே. அவர் தனது கட்சியை பலப்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அன்புமணி ராமதாஸுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்ததன் மூலம் அதில் முதல் படியைத் தாண்டியுள்ளது பாமக.

சீரமைப்பதில் தீவிரம்
அடுத்த கட்டமாக கட்சியை சீரமைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன. பா.ம.க.வை மறு சீரமைக்கும் முயற்சியில் ஒன்றாக, அதிலிருந்து கழன்று சென்ற முன்னாள் தெறி நிர்வாகிகளை மீண்டும் பா.ம.க.வுக்குள் அழைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். அதுவும் எந்த ஈகோவும் பார்க்காமல் தானே போன் போட்டு அழைக்கிறார்.

வேல்முருகன் வருவாரா
அந்த வகையில் பேராசிரியர் தீரனை அழைத்து, கன்வின்ஸ் செய்து, இணைத்துக் கொண்டவர் இப்போது அடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பக்கம் பார்வை திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள். இந்த ப்ராஜெட்டுக்கான முதல் ரவுண்ட் வேலைகள் முடிந்துவிட்டனவாம். இது பற்றி வேல்முருகனிடம் பேசியபோது, இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.

பாமகவுக்குச் சமம்
தொடர்ந்து அவர் கூறுகையில், இப்போது நானும் பா.ம.க.வுக்கு நிகராக அமைப்பு வைத்துள்ளேன் (த.வா.க). அதனால் இப்போதைக்கு பா.ம.க.வில் சேரும் எண்ணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் எப்படி என தெரியவில்லை. அந்த கட்சியில் நானும், காடுவெட்டி குருவும் இருந்த இடம் இன்று வரையில் காலியாகத்தான் இருக்கிறது. இப்போது அங்கு ராமதாஸ் மட்டுமே இருக்கிறார்.

என்ன வேண்டும்னாலும் நடக்கலாம்
எதிகாலத்தில் பா.ம.க.வினரும், எங்கள் கட்சியினரும் விரும்பினால் இணைப்பை நடத்தி, தலைமை தாங்குவேன் என்று ஒரே போட்டாக போட்டார் வேல்முருகன். இது பாமக தரப்புக்கு பெரும் கோபத்தைக் கொடுத்துள்ளதாம். இருப்பினும் அடுத்தடுத்து பேச்சுக்கள் தொடரும் என்று தெரிகிறது. பார்க்கலாம்.. வேல்முருகன் மீண்டும் பாமகவின் படைத் தளபதியாக உருவெடுப்பாரா என்று.
- ஜி.தாமிரா
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications