Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேங்கைவயல் வழக்கில் போலீஸ் மீது சந்தேகம்.. சிபிஐ வசம் விசாரணையை ஒப்படைக்க சிபிஎம் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிநீரில் மலம் கலந்தது தொடர்பாக நடைபெற்றுவரும் வேங்கைவயல் வழக்கு விசாரணையில், போலீசின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உரியதாக இருப்பதாகவும், எனவே வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் அமைந்திருந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்த விஷயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்த விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. அதேநேரம், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.

vengaivayal police cpm

இதனையடுத்து இவ்வழக்கு 2023ம் ஆண்டு சிபிசிஐடி வசம் மாறியது. மறுபுறம் சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை அடுத்து இந்த அறிக்கையை பிரமாண மனுவாக தாக்கல் செய்யும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

சுமார் 750 நாட்களுக்கு பிறகு குற்றவாளிகள் குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே போலீசார் பழி சுமத்துவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை.

சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+