பழம்பெரும் நடிகர் கலைமாமணி லியோ பிரபு காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!
சென்னை: பழம்பெரும் சினிமா மற்றும் நாடக நடிகர் லியோ பிரபு காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் லியோ பிரபு. இவர் மேடை நாடகக் குழுக்களில் சேர்ந்து, ஏராளமான நாடங்களில் நடித்து, பின்னர் சினிமாவிலும் அசத்தினார். பருவகாலம், இது எங்க நாடு, நான் மகான் அல்ல, பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் லியோ பிரபு.

கோவையைச் சேர்ந்த இவர், ஸ்டேஜ் இமேஜ் என்ற பெயரில் நாடகக் குழுவை நிறுவி ஏராளமான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளார். இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு லியோ பிரபுவுக்கு கடந்த 1990ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கியது.
குடும்பத்தினரோடு மதுரையில் வசித்து வந்த லியோ பிரபு, உடல்நிலை குன்றி இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 90. லியோ பிரபுவின் இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications