முதல்வரின் தாயார் மறைவுக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு விஜய் சேதுபதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், தமிழக பாஜக தலைவர் எல் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

 Vijay Sethupathi condolences CM Edappadi Palanisamys mother demise

தாயாரின் இறுதிச் சடங்குகள் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோரே இரங்கல் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் சென்னை திரும்பினார். இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், நேரில் சந்தித்து முதல்வரின் தாயாரின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

 Vijay Sethupathi condolences CM Edappadi Palanisamys mother demise

இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி 800 திரைப்படத்திலிருந்து விலகிய கையோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவரது தாயின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து முதல்வருடன் சற்று நேரம் அமர்ந்திருந்த விஜய் சேதுபதி அவருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு திரும்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+