விஜய் ரசிகர்களை மட்டுமே நம்பியுள்ளார்.. தவெக ஒரு தேர்தலை கூட சந்தித்ததில்லை.. எடப்பாடி பழனிசாமி!
சென்னை: தவெக தலைவர் விஜய் முழுக்க முழுக்க ரசிகர்களை மட்டுமே நம்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு தேர்தலை கூட விஜய் சந்திக்கவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று என்டிடிவியின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அரசியல் பிரமுகர்கள் தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஒரே குடும்பம் அதிகாரத்தில் இருப்பதை தான் மக்கள் வெறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊழல் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எது சிறந்த ஆட்சி என்பதை மக்கள் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் கண்டு உணர்ந்தனர்.
திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமை பொறுப்புக்கு வர முடியும். ஆனால் அதிமுகவில் அப்படி கிடையாது. யார் உண்மையாக உழைக்கிரார்களோ, அவர்கள் முதல்வராக முடியும். வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். செந்தில் பாலாஜியை அருகில் வைத்துக் கொண்டு ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுகிறார்.
எங்களை எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் கிடையாது. அதன் காரணமாக என்டிஏ கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். என்டிஏ கூட்டணி தேசிய அளவில் பாஜகவால் உருவாக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாட்டில் அதிமுக தான் தலைமை. அதனை அமித்ஷாவும் கூறிவிட்டார். பாஜக கூட்டணியில் இணைவ எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.
இவ்வளவு பேசும் திமுக, 1999 லோக்சபா தேர்தலில் ஏன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது? கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும்தான். இங்கே கொள்கை மட்டுமே நிரந்தரம். சட்டசபைத் தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டது. 180 தொகுதிகளில் கூட்டங்களை நடத்தி தயாராக இருக்கிறோம். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒற்றை கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும்.
அதேபோல் விஜய் சிறந்த நடிகர் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. விஜய் இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்கட்டும். மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபித்திருக்கிறார்கள். விஜய் முழுக்க முழுக்க ரசிகர்களை நம்பி மட்டுமே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்!












Click it and Unblock the Notifications