Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஸ்வர்யா வீட்டிலாவது சாவி டைப் லாக்கர்.. விஜய் யேசுதாஸ் வீட்டில் என்ன டைப் லாக்கர்? பகீர் திருட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் யேசுதாஸ் வீட்டு நகைகள் பாஸ்வேர்டு போட்ட லாக்கரில் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள்.

பாடகர் யேசுதாஸின் இளைய மகன் விஜய் யேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலா, மகன், மகளுடன் குடியிருந்து வருகிறார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் பாடியுள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காதலர்கள் தினத்தின் போது துபாயில் நடந்த இசைக் கச்சேரியில் தர்ஷனா பாலாவை சந்தித்தார். இருவரும் 5 ஆண்டுகள் காதலித்தனர்.

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

இதையடுத்து இவர்களுக்கு 2007ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்தது. இவர்களுக்கு ஆமேயா, ஆவ்யன் ஆகிய மகள், மகன் உள்ளனர். விஜய் யேசுதாஸுக்கு சொந்தமாக சென்னை அபிராமபுரத்தில் 3ஆவது தெருவில் வீடு உள்ளது. இங்கு தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தர்ஷனா பாலா நேற்று முன் தினம் ஒரு புகாரை கூறியுள்ளார்.

லாக்கரி வைத்த நகைகள்

லாக்கரி வைத்த நகைகள்

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு டிசம்பரில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகளைப் பார்த்தேன். பின்னர் கடந்த மாதம் நகைகளை எடுக்கச் சென்ற போது அவற்றைக் காணவில்லை. இதன் மதிப்பு ரூ 60 லட்சம் வரை இருக்கும். லாக்கரை திறந்த யாரோ திருடிச் சென்றுள்ளனர். எனவே எனது நகைகளை மீட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு போட்டு திறக்கும் அமைப்பைக் கொண்டது. எனவே வெளியிலிருந்து யாரும் கைவரிசை காட்டியிருக்க வாய்ப்பு இல்லை. நன்கு அறிமுகமான, நெருங்கிப் பழகிய அல்லது பாஸ்வேர்டு தெரிந்தவர்கள்தான் திருடியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். வீட்டில் வேலை செய்த 3 பேர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விசாரணை

விசாரணை

அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்டமாக நகை திருட்டு தொடர்பாக துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கை ரேகை நிபுணர்களும் விரைந்து சென்று தடயங்களை சேகரித்து வருகிறார்கள். விஜய் யேசுதாஸின் மகளும் மகனும் சென்னையில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விடுமுறையின் போதெல்லாம் விஜய் யேசுதாஸ் தனது குடும்பத்தினருடன் கேரளா சென்று விடுவார்.

ரஜினி மகள் வீட்டிலும் கைவரிசை

ரஜினி மகள் வீட்டிலும் கைவரிசை


அது போன்று அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என தெரிகிறது. விஜய் யேசுதாஸ தற்போது ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுள்ளார். அவர் சென்னை வந்த பிறகு அவரது வெர்சனும் கேட்கப்படும் என தெரிகிறது. அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 பவுன் நகைகள் திருடு போயின. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு பிரபலம் வீட்டில் இது போன்று திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+