மக்கள் பிரச்சனைகளை கவனிப்பதை விடுத்து... குழப்பம் ஏற்படுத்தும் வேலை அரசுக்கு எதற்கு..? -விஜயகாந்த்
சென்னை: மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தமிழ்நாடு தினத்தின் தேதியை மாற்றுவது, பள்ளிகள் திறந்த பிறகு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்குவது என குழப்பத்தை உருவாக்கும் வகையில் அரசு செயல்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இல்லம் தேடி கல்வித்திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மக்கள் கேள்வி
கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில்,1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் தற்போது அவசியமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பெரும் குழப்பம்
மேலும், இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இல்லம் தேடி கல்வி திட்டம் அவசியமா என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மக்கள் பிரச்சனைகள்
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜூலை 18-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோ டீசல் விலை உயர்வு, சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கின்றனர்.

என்ன பயன்?
மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் தேதியை மாறுவதால் யாருக்கு எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications