மாஸா, கெத்தா, "ஓஹோய்.." விஜய பிரபாகரன் "பஞ்ச்.." குபுக்கென சிரிப்பலை! இன்னும் என்னல்லாம் பார்க்கனுமோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து, தேமுதிக வெளியேறினாலும் வெளியேறியது.. அந்த கட்சி தலைவர் விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரனை கையில் பிடிக்க முடியவில்லை.

Recommended Video

    #TNElection2021 கேப்டன் விஜயகாந்த் முதல் குட்டி கேப்டன் வரை: தாக்குப்பிடிக்குமா தே.மு.தி.க…?

    சும்மாவே ஆவேசமாக பேசுகிறேன் என்ற பெயரில் வாயில் வந்ததையெல்லாம் பேசுவதாக விஜயபிரபாகரன் மீது விமர்சனங்கள் உண்டு.. கூட்டணியில் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்ற கடுப்பு காரணமாக இப்போதெல்லாம், இன்னமும் ஒரு படி கீழே இறங்கி பேச ஆரம்பித்து விடுகிறார்.

    இப்படித்தான், கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்று விஜய பிரபாகரன் பேசும்போது, எடப்பாடி .. எடப்பாடி என்று சொல்கிறீர்களே, அவர் என்ன எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதாவா .. இந்தவாட்டி எடப்பாடி தொகுதியிலேயே அவர் தோற்றுப் போவார் என்று சரமாரியாக பேச ஆரம்பித்தார்.

    கேலி, கிண்டல்

    கேலி, கிண்டல்

    அது மட்டும் கிடையாது.. எப்போதுமே விஜயகாந்த் பற்றி பேசும்போது, சினிமாவில் வரக்கூடிய பஞ்ச் டயலாக் போல எதையாவது சொல்லி, தொண்டர்களை உசுப்பேற்றி பேசுவது விஜய பிரபாகரன் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படித்தான் ஒரு கூட்டத்தில் அவர் பேசிய "எழுச்சி உரை " தற்போது சமூகவலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

    ஓஹோய்

    ஓஹோய்

    தொண்டர்களை உசுப்பேற்றுவதா நினைத்துக்கொண்டு அவர் பேசியது கடைசியில் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது. கூட்டணியிலிருந்து விலகி வந்ததை குறிப்பிட்டு, அதை பெருமைக்குரியது போல பேசியுள்ளார் விஜய பிரபாகரன். கூட்டத்துக்கு நடுவே, "மாஸ்ஸா..." என்று விஜயபிரபாகரன் கேட்க.. கூடியிருந்த கூட்டம் "மாஸ்.." என்று பதில் சொல்கிறது. "கெத்தா.." என்று விஜயபிரபாகரன் மீண்டும் கேட்க.. "கெத்து.." என்று கூட்டம் பதில் சொல்கிறது. இத்தோடு விடவில்லை விஜய பிரபாகரன். "கேப்டனா.." "ஓஹோய்.." என்று சிரித்தபடி அவர் சொல்ல.. இதை கேட்டதும் கூட இருந்த நிர்வாகிகளும் குலுங்கி குலுங்கி சிரித்துவிட்டனர்.

    சிரிப்பலை

    சிரிப்பலை

    நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்ல.. இந்த "ஓஹோய்" என்ற தொனி உச்சரிப்பை பார்த்து, தமிழகமே சிரித்துக் கொண்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் உலவும் கிண்டல் கேள்விகளை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. யதார்த்தம் தெரியாமல் இவர் ஓஹோய் என சவுண்ட் விடுகிறாரே என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் தொண்டர்கள்.

    செல்வாக்கு குறைந்தது

    செல்வாக்கு குறைந்தது

    விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு தேமுதிக கட்சிக்கு செல்வாக்கு குறைந்து கொண்டே செல்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதத்தை விட தேமுதிக குறைவாக வாங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நிலைமை இப்படி இருக்கும்போது, கிடைக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு கட்சியை பலப்படுத்துவது விட்டுவிட்டு, அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து இப்போது எங்கே கூட்டணி வைக்கலாம் என்று சிறுசிறு கட்சிகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது தேமுதிக.

    கட்சியை வளர்க்க பாருங்க

    கட்சியை வளர்க்க பாருங்க

    பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் போன்றோர் இவ்வாறு உணர்ச்சிகரமாக பேசியும் சிந்தித்தும் வருவதுதான் இந்த கட்சி வளர்ச்சி பெற முடியாததற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். எனவே, இனியாவது இந்த ஓஹோய்.. ஆஹா போன்ற கோஷங்களை விட்டுவிட்டு, கட்சியை வளர்க்கும் பணியில் தேமுதிக நிர்வாகிகள் ஈடுபட்டால் நல்லது என்ற எதிர்பார்ப்புதான் தொண்டர்களிடம் எஞ்சியிருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+