விஜயகாந்துக்கு கொரோனா.. உடல்நிலை பின்னடைவு.. மியாட்டில் போலீஸார் குவிப்பு.. தேமுதிகவினர் கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அண்மைக்காலமாக உடல் நிலை சரியில்லாத நிலை உள்ளது. இதனால் அவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் காரணமாக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Vijayakanths health condition is not stable

அங்கு கிட்டதட்ட 15 நாட்களுக்கு மேல் சிகிச்சை மேற்கொண்டார். நடுவே அவரது உடல்நிலை சற்றுநிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அங்கு விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து மக்கள் கடுமையாக வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் வழக்கமான பரிசோதனைக்காக மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது சளி மாதிரியை எடுத்து சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+