விக்கிரவாண்டி தேர்தல்.. பின் வாங்கும் அதிமுக? பாமகவை வைத்து செம கேம் பிளான்! ஆப்பு அவங்களுக்காமே
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது சந்தேகம் ஆகி உள்ளது. இது தொடர்பாக உட்கட்சி அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தல் தேதி: விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் இன்றொரு நடைமுறைக்கு வருகின்றன. அடுத்த 1 மாதம் தேர்தல் தேதிகள் நடைமுறையில் இருக்கும்.
வேட்புமனு தாக்கல் : ஜூன் 14 - 21
வேட்புமனு பரிசீலனை : ஜூன் 24
வேட்புமனு திரும்பப்பெற : ஜூன் 26
வாக்குப்பதிவு : ஜூலை 10
வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13
தேர்தல் ஏன்?: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் அவர் லோக்சபா தேர்தல் பிரச்சார நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆன அவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மரணமடைந்தார்.
அதிமுக தோல்வி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது சந்தேகம் ஆகி உள்ளது. இது தொடர்பாக உட்கட்சி அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
யோசனை: இந்த நிலையில்தான் பின்வரும் காரணங்களுக்காக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கலாமா என்று அதிமுக யோசிக்கிறதாம்.
1. விக்கிரவாண்டியில் தேர்தல் தோல்வி அடைந்தால் அதிமுகவிற்கு மேலும் அது பின்னடைவை ஏற்படுத்தும். அதனால் அதிமுக தவிர்க்கலாம்.
2. பாமகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக நினைக்கிறதாம். பாமகவும் 2026 சட்டசபை தேர்தலுக்கு அதிமுக பக்கம் வரும் வாய்ப்புகள் இருக்கலாம்.
3. 2026 சட்டசபை தேர்தல் என்பதால் பாஜக கூட்டணியில் தொடராமல் தமிழ்நாடு அளவில் பலமாக உள்ள மாநில கட்சிகளின் கூட்டணிக்கு.. அதாவது அதிமுக கூட்டணிக்கு பாமக போக பார்க்கலாம்.
4. அதற்கு முன்னோட்டமாக இப்போதே அதிமுக - பாமக இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடக்கிறதாம். விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக விட்டுக்கொடுக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.
தொடர் தோல்விகள் இருக்கும் நிலையில் அதற்கு இடையில் விக்கிரவாண்டி தேர்தலையும் சந்தித்து தோல்வியை தழுவ அதிமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications