ஆம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்குள் மோதல்.. புழல் சிறையில் பதற்றம்.. சிறை அதிகாரி மீது தாக்குதல்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஜாமீனில் எடுப்பது தொடர்பாக பொன்னை பாலு, மணிவண்ணன் மற்றும் புதூர் அப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சண்டையை தடுக்கச் சென்ற உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட நாகேந்திரன், உடல் நலக்குறைவால் வேலூர் சிறையில் இருந்தபடியே அண்மையில் உயிரிழந்தார்.

புழல் சிறையில் இருந்தவர்களில் அசுவத்தாமன் உள்பட்12 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். பொன்னை பாலு, அவரது மைத்துனர் மணிவண்ணன், வெடிகுண்டு சப்ளையர் என கூறப்படும் ரவுடி சென்னை அசோக் நகர் புதூர் அப்பு உள்ளிட்டோர் ஜாமீன் கிடைக்காமல் புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவிலேயே உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மற்றவர்களை ஜாமீனில் எடுப்பது தொடர்பான விவகாரத்தில் பொன்னை பாலு, அவரது மைத்துனர் மணிவண்ணன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், வெடிகுண்டு சப்ளையர் அசோக் நகர் புதூர் அப்பு தலைமையில் ஒரு தரப்பாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இரு தரப்பினரும் கைகளால் தாக்கி கொண்டனர். பின்னர் கட்டையை எடுத்துக்கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் சிறை காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசை தள்ளி விட்டதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பாக புழல் சிறை தரப்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் சப்ளை செய்த அப்புவுக்கு பேசியபடி பணம் கொடுக்கவில்லை எனக் கூறஓஅடுகிறது. இது தவிர ஜாமீன் எடுக்கவும் ஆற்காடு சுரேஷ் தரப்பு உதவவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுக்கும் அப்புவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications