சசிகலா வீட்டில் பரபரப்பு.. விவேக்கின் மனைவி கீர்த்தனா தற்கொலை முயற்சி.. தீவிர சிகிச்சை.. என்னாச்சு
சசிகலா அண்ணன் மகன் விவேக்கின் மனைவி கீர்த்தனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
சென்னை: சசிகலா அண்ணன் மகன் விவேக்கின் மனைவி, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?
சென்னை, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் பிரீஸ் கார்டனை சேர்ந்தவர் விவேக்... சசிகலாவின் அண்ணன் மகனான இவர், ஜாஸ் சினிமா நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஜாஸ் சினிமா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவருக்கு ஜெயலலிதா தலைமையில் கடந்த 2016ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அபார்ட்மென்ட்
ஆனால் ஜெயலலிதா விவேக் திருமணத்துக்கு செல்லவில்லை... அதற்கு பதிலாக வாழ்த்து கடிதம் மற்றும் பரிசு பொருட்கள் அனுப்பி வைத்தார்... இதற்கு பிறகு சசிகலாவின் தலைமையில் விவேக்- கீர்த்தனா தம்பதிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.. துற்போது, விவேக் ஜெயராமன் தன்னுடைய மனைவி கீர்த்தனாவுடன் எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்... கீர்த்தனாவுக்கு இப்போது 28 வயதாகிறது.. கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.

கீர்த்தனா
கருத்து வேறுபாடுகள் இவர்களுக்குள் அதிகமாக தலைதூக்கவும், குடும்பத்தில் நிறைய சண்டைகள் தம்பதிக்குள் வந்துபோயுள்ளன.. ஒருகட்டத்தில், தன்னுடைய மாமியாரான இளவரசியிடமும், தன் கல்யாணத்தை நடத்தி வைத்த சசிகலாவிடம் இந்த பிரச்சனையை கீர்த்தனா கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், விவேக்கை அவர்கள் 2 பேருமே கண்டிக்கவில்லையாம்.. குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் அவரை கண்டிக்கவில்லை என்கிறார்கள்..

சசிகலா
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவேக் வீட்டிற்கு தாமதமாக வந்திருக்கிறார்.. இதனால், விவேக்கிற்கும் கீர்த்தனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை வெடித்துள்ளது... பிறகு, விவேக் சமாதானப்படுத்தியும் கீர்த்தனா ஆறுதல் அடையவில்லை என தெரிகிறது... பிறகு திடீரென கீர்த்தனா வீட்டில் இருந்த, தேவையில்லாத மாத்திரைகளை அதிகளவில் விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்... சிறிது நேரத்தில் அவர் மயங்கியதை கண்ட விவேக் அதிர்ந்து போய், உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனையில் கீர்த்தனாவை சேர்த்துள்ளார்..

சீரியஸ் கண்டிஷன்
அங்கு கீர்த்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.. பிறகு டாக்டர்கள் பரிந்துரையின்படி, அடையாறில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கீர்த்தனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின்படி பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தில் நடந்த இந்த சம்பவம், அதிமுக, அமமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications