Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘SIR’ இன்றே கடைசி.. பெயர் மிஸ்ஸானால் இனி ஓட்டு போடவே முடியாதா? ஒரே ஒரு சான்ஸ் மட்டும் தான் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆா் பணியில், வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்றுக்குள் படிவங்களை வழங்காவிட்டால் அவர்கள் பெயர் அடுத்து வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படாது. அதே நேரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவேளை வாக்காளரின் பெயர் விடுபட்டிருந்தால், அதற்குப் பிறகு உரிய ஆவணங்களை சமர்பித்து பெயரினை சேர்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் புதுப்பித்தலை நடத்துகிறது. ஆனால் 2026 தேர்தலை முன்னிட்டு, இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் SIR பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பூட்டு லெவல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கணக்கிட்டு படிவங்களை வழங்கினர்.

Voter List election commission tn govt

வாக்காளர் பட்டியல்

இந்த படிவத்தில் வாக்காளரின் பெயர் முகவரி, ஆதார் எண், 2002 ஆண்டில் இருந்த உறவினரின் பெயர் மற்றும் விபரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த படிவத்தை பி.எல்ஓக்களிடம் வழங்கியதும், வாக்காளரின் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம், தவறான பதிவுகள் நீக்குவது, இறந்தவர்கள் பெயர் நீக்குவது, இருமுறை பதிவு நீக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எஸ்ஐஆர் அவகாசம்

தமிழகத்தில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,41,10,380 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று வரையில் 6,40,83,414 படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 99.95 சதவீதம் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு விட்டன். எனினும், இன்னும் சில ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே தங்களின் படிவங்களைச் சமர்ப்பிக்காமல் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

இதுவரை பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் முகவரி மாறியவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் இருந்தவர்கள், உயிரிழந்தவர்கள், பழைய முகவரியில் வசிக்காதவர்கள், மற்ற இடத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரது பெயர்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும்.

தேர்தல் ஆணையம்

அந்த பட்டியலில், வார்டு தொடங்கி, மண்டலம், சட்டமன்றம் மற்றும் மாவட்ட வாரியாக, நீக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை அந்த பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, வரைவு பட்டியல் வெளியான பிறகு, தேவையான ஆவணங்களை அளித்து பெயரை மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்தல் ஆணையம் தனி அவகாசம் வழங்கும். அதன்பின்னர் ஜனவரி மாதத்தில் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கும்.

2026 தேர்தல்

அதே நேரத்தில் இறுதி வாக்காளர் பட்டியலிலும் உங்கள் பெயர் இடம்பெறாவிட்டால், வரும் 2026 தேர்தலில் உங்களால் வாக்களிக்க முடியாது. அதனால் தான், இன்று வரை வழங்காதவர்கள், இன்றும் அந்த வாய்ப்பை தவறவிட்டால் கூடுதல் சிரமம் உருவாகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். வரைவு பட்டியல் வெளியானதும், வாக்காளர்கள் தங்கள் பெயர் சரியாக உள்ளதா என்பதை கவனமாகச் சரிபார்க்க வேண்டும். அதில், தவறுகள் இருந்தால் உடனடியாக புகாரளிக்குமாறும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+