வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்கள் போட்டோ இடம்பெறும்.. தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட மேஜர் அப்டேட்!
சென்னை: வெளிப்படைத்தன்மையுடன் நாட்டுகே முன்னுதாரமான தேர்தலாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்ற நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் முன்வைத்தனர். தேர்தல் ஆணையர், உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேதியை நிர்ணயிப்பதாக உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து, அரசின் உயர் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக விளக்கினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஞானேஷ் குமார், "ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணிகள் நாட்டுகே முன்னுதாரணமாக நடைபெற்றது. அந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 72 நாடுகள் பங்கேற்ற தேர்தல் பெருங்கூட்டத்தில் தமிழ்நாடு பற்றி பெருமையாக பேசினோம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாட்டுக்கே முன்னுதாரணமாக அமையும். தேர்தலுக்காக அமைக்கப்படும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தேவையான குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரப்படும். அதுமட்டுமல்லாமல் வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படாது. அதேசமயம் செல்போன் கொண்டு வருபவர்கள் கொடுத்துச் செல்ல செல்போன் பாதுகாப்பகம் அமைக்கப்படும்.
சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு சதவிகிதம் வெளியிடப்படும். மேலும் தேர்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவுகள் கண்காணிக்கப்படும். எனவே தேர்தல் அதிகாரிகள் எந்தவித அச்சமும் இன்றி செயல்படலாம்.
வழக்கமாக வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகள் இந்த தேர்தலில் கடைசி 2 சுற்று வாக்குகள் இருக்கும்போது எண்ணப்படும். அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். தமிழ்நாட்டில் 20 முதல் 29 வயதான வாக்காளர்கள் ஒரு கோடி பேர் உள்ளனர். அதேசமயம் 19 முதல் 20 வயதிலான வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர்.
மொத்தம் தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.90 கோடி பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்து 267 பேர் தான் மேல்முறையீடு செய்திருந்தனர். 2011 மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு பின் தேர்தல் பார்வையாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை புரிவார்கள். எந்த வாக்குச்சாவடியிலும் 1200க்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள். வாக்கு எண்ணும்போது வேட்பாளர் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் விவிபேட் இயந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: அன்னைக்கே சொன்னாரே அன்புமணி.. திமுகவில் சேலம் அருள்? ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை! அப்போ ராமதாஸ்? -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
Srirangam: அந்த செவுரு எத்தனை பேர பலி வாங்க போகுதோ? ஜெ. அரசியல் வாழ்வை காலியாக்கிய ‘ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்’ -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
சாப தொகுதி காங்கேயம்.. தோல்வி பீதியில் அமைச்சர்? ஜெயலலிதாவே எம்எல்ஏ பதவியை தூக்கியெறிந்த இடமாச்சே












Click it and Unblock the Notifications