எனக்கு எந்தவித கொரோனா தொற்றும் இல்லை.. வீட்டில்தான் இருக்கிறேன்.. விபி கலைராஜன் விளக்கம்
சென்னை: திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும், சென்னை தியாகராய நகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.ஆனால் விபி கலைராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என மறுத்துள்ளார்.
Recommended Video
அதிமுக சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார்.. இவர் ஜெயலலிதா மறைந்த பின்னர், டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்தார்.

அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வி.பி.கலைராஜன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விபி கலைராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும்,இதனால் விபி கலைராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விபி கலைராஜன், தனக்கு எந்தவித கொரோனா தொற்றும் இல்லை; வீட்டில்தான் இருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications