Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் போலீஸை பாடாய்படுத்திய நபர்.. நான்ஸ்டாப்பாக அந்த வார்த்தை.. காதுகள் பாவமில்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா ஜங்சன் அருகே போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், போக்குவரத்து போலீசாரிடம் மிகவும் ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டார். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போலீசாரை பாடாய்படுத்தி அந்த நபரை, நண்பரை வரவழைத்து ஒருவழியாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா ஜங்சன் அருகே போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் சிறிய அளவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார், அவர் சுயநினைவில் இல்லை என்பதை கண்டனர். அவரிடம் பேசி போது, போலீசார் குறித்து மிகவும் தகாத வார்த்தைகள் பேசியுள்ளார்.

Watch how a drunk auto driver behaved with the police in Chennai

ஆனால் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்கவில்லை.. போதையில் இருந்த அவரிடம் எதற்காக இப்படி குடித்துவிட்டு இருக்கீங்க என்று போலீசார் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் மிக அசிங்கமான வார்த்தைகளை பேசிய படி, அரசு விற்கிறது.. நான் குடிக்கிறேன் என்று விதாண்டவாதமாக பேசினார். அதேநேரம் மது போதையில் உளறிய படி இருந்த அந்த நபரை போலீசார் அங்கிருந்து கிளம்பி போக சொன்னார்கள்.

கிருஷ்ணகிரி டாஸ்மாக் 'வீரன்'.. ரூ.180 படுத்தும் பாடு.. நடுரோட்டில் லாரியை நிறுத்தி முரட்டு சம்பவம்


ஆனால் அவர் போகாமல் சாலையில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசியபடி இருந்தார். ஒரு கட்டத்தில் போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் அளித்து வரச்சொன்னார்கள். அவர்கள் நேரில் வந்த விசாரித்த அங்கிருந்து அவரை அனுப்பி வைக்க முயற்சித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போலீசாரை தகாத வார்த்தைகளால் விமர்சித்த ஆட்டோ ஓட்டுநரை, ஒருவழியாக அவரது நண்பரை நேரில் வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

Watch how a drunk auto driver behaved with the police in Chennai

அப்போது குடிபோதையில் இருந்த அந்த நபர், 'இவன் தான் என்ன அடிச்சி என் மேல கேஸ் போட்டான் மச்சான்' என்று போதையில் உளறியபடி இருந்தார். சுமார் அரை மணி நேரமாக நடுரோட்டில் அமர்ந்து சென்னையில் போலீசாரை பாடாய் படுத்திய நபரின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசிய நபரிடம் போதை தெளிந்த பின்னர், போலீசார் கண்டிப்பாக நேரில் அழைத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் மது போதையில் ஒருவர், நடுரோட்டில் லாரியை மறித்து அதன் மீது சாய்ந்து தூங்கினார். தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்தபடி, அசால்டாக சென்றார். மதுபோதையில் அங்கும் இங்கும் உலாவந்த அவர், வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை இருந்தது. இதை பார்த்த சிலர், அவரை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியா சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+