சாத்தனூர் அணை படிப்படியாகவே திறக்கப்பட்டது.. சட்டசபையில் எடப்பாடி கேள்விக்கு ஸ்டாலின் பதில்
சென்னை: இன்று சட்டசபையில், சாத்தனூர் அணையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் 5 முறை எச்சரிக்கை அளித்து, படிப்படியாக தான் அணை திறந்துவிடப்பட்டது என்றும், அதிமுக ஆட்சியில் தான் செம்பரம்பாக்கம் அணையை எந்த முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டதாகவும் பதில் அளித்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 51 செமீ மழை பதிவானது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாத்தனூர் அணையில் இருந்து எந்தவித முன்னறிவுப்பும் இன்றி 2.60 லட்சம் லிட்டர் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் தான் வெள்ளம் மற்றும் பாதிப்பு காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் திமுக அரசு முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று விமர்சித்தனர்.
இதற்கு அப்போதே பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னறிவிப்பு வெளியிட்டு தான் அணை திறக்கப்பட்டதாகவும், இதனால் தான் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டசபையில் ஒலித்தது. 2 நாள் கூட்டமாக நேற்றும் இன்றும் தமிழக சட்டசபை கூடியது. நேற்று சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாத்தனூர் அணை திறப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தான் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதே கருத்தை பாமகவும் தெரிவித்து இருந்தது.
அப்போது சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- 5 முறை எச்சரித்த பின்னரே சாத்தனூர் அணை படிப்படியாக திறக்கப்பட்டது. முன்னறிவிப்பு வெளியிட்டு படிப்படியாக திறக்கப்பட்டதால் தான் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது தான் உண்மை. அதிமுக ஆட்சியில் தான் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டது. இதனால் தான் அப்போது வெள்ளம் ஏற்பட்டது. என்று கூறினார்.
-
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
கன்னியாகுமரியில் எடப்பாடியே எதிர்பார்க்காதது... விஜய்யின் முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமார் அதிரடி -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications