சாத்தனூர் அணை படிப்படியாகவே திறக்கப்பட்டது.. சட்டசபையில் எடப்பாடி கேள்விக்கு ஸ்டாலின் பதில்
சென்னை: இன்று சட்டசபையில், சாத்தனூர் அணையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் 5 முறை எச்சரிக்கை அளித்து, படிப்படியாக தான் அணை திறந்துவிடப்பட்டது என்றும், அதிமுக ஆட்சியில் தான் செம்பரம்பாக்கம் அணையை எந்த முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டதாகவும் பதில் அளித்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 51 செமீ மழை பதிவானது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாத்தனூர் அணையில் இருந்து எந்தவித முன்னறிவுப்பும் இன்றி 2.60 லட்சம் லிட்டர் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் தான் வெள்ளம் மற்றும் பாதிப்பு காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் திமுக அரசு முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று விமர்சித்தனர்.
இதற்கு அப்போதே பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னறிவிப்பு வெளியிட்டு தான் அணை திறக்கப்பட்டதாகவும், இதனால் தான் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டசபையில் ஒலித்தது. 2 நாள் கூட்டமாக நேற்றும் இன்றும் தமிழக சட்டசபை கூடியது. நேற்று சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிரான மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாத்தனூர் அணை திறப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தான் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதே கருத்தை பாமகவும் தெரிவித்து இருந்தது.
அப்போது சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- 5 முறை எச்சரித்த பின்னரே சாத்தனூர் அணை படிப்படியாக திறக்கப்பட்டது. முன்னறிவிப்பு வெளியிட்டு படிப்படியாக திறக்கப்பட்டதால் தான் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது தான் உண்மை. அதிமுக ஆட்சியில் தான் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டது. இதனால் தான் அப்போது வெள்ளம் ஏற்பட்டது. என்று கூறினார்.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications