மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வழிபாடு நடத்தினர்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் குடிநீருக்காக மக்கள் தவித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் குடிநீர் பஞ்சம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்க நினைத்தாலும், தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. போர்களிலும் தண்ணீர் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இதனிடையே, குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்துவர முடிவு செய்துள்ளது. இதேபோல் மற்ற ஊர்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் லாரி உரிமையாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சில இடங்களில் குடிநீர் தேவைக்கு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை என்று கூறி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரம், தண்ணீர் பஞ்சத்தை போக்க, மழை பெய்ய வேண்டி அதிமுக சார்பில், கோவில்களில் யாகம் வளர்க்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications