பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு! சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க நடவடிக்கை: தமிழக அரசு தகவல்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கினை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் 30ம் தேதி ஆஜராகும்படி, சி.பி.சிஐடி அனுப்பிய சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் சி.பி.சிஐடி அலுவலகத்தில் ஆஜராக கால அவகாசம் வேண்டும் என்றும் தான் வெளியூரில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும் தன்னிடம் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் நக்கீரன் கோபால் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைப்படும்" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது. அது வரை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில ஆஜராக வேண்டும் என நக்கீரன் கோபாலுக்கு நீதிபதி அனுமதி அளித்தார். மேலும் வழக்கு விசாரணையும் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மற்றொரு வழக்கு வாசு என்பவர் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கும் நீதிபதி இளந்திரையன் முன்பு நடந்தது. அப்போது மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பணியில் உள்ள நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், அதில் சமூக நல அமைப்புகள் மற்றும் பெண்கள் இடம் பெற வேண்டும் என கோரினார். இந்த வழக்கில் விசாரணை நிலவரம் என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications