“கரும்பு விவசாயி” சின்னம் கிடைக்காதா? விடமாட்டோம்.. பொங்கி எழுந்த சீமான்.. அடுத்த அடி டெல்லியில்!
சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும், நிச்சயம் கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறுபோம் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டது.

தமிழ்நாட்டில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதன்மூலம் வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, முதலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பிறகு, 2019 லோசபா தேர்தல் தொடங்கி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. இந்த லோக்சபா தேர்தலிலும், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகிறது. ஆனால், இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அக்கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி கேட்டு பெற இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதால், நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கான களப்பணிகள் உள்ளிட்டவற்றைத் திட்டமிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய சீமான், “தேர்தல் சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும். திட்டமிட்டு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு இருக்கிறது. ஏர் உழும் சின்னம், வண்டிச் சக்கரம் சின்னம் கேட்டபோது, அந்த சின்னங்களை மாநில கட்சிகளுக்கு கொடுத்துள்ளோம் உங்களுக்கு தரமுடியாது என்றார்கள்.
இப்போது பக்கத்து மாநிலத்தில் புதிதாக தொடங்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். எனக்கு நெருக்கடி தரவேண்டும் என்பதற்காக வேறு ஒருவருக்கு திட்டமிட்டு இந்த சின்னத்தை ஒதுக்கியுள்ளனர். 6 தேர்தல்களில் இந்த சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். எங்கள் மாநிலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எங்களுக்கான சின்னத்தை ஒதுக்கவேண்டும்.
மற்ற மாநிலங்களில் நாங்கள் போட்டியிட்டாலும் அப்போது வேறொரு சின்னத்தை அளிக்கலாமே தவிர, இங்கு எங்களுக்கான கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பேசி வருகிறோம். தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். நிச்சயமாக விவசாயி சின்னத்தை பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார் சீமான்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. முதல் தேர்தலில் 1.10% வாக்குகளைப் பெற்றது. 2019 லோக்சபா தேர்தலில் 3.89% வாக்குகளையும், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 6.72 சதவீத வாக்குகளையும் பெற்றது. ஆனால், இதுவரை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications