பணம் கொடுத்துதான் ஜெயிக்கணும் என்ற அவசியமே அதிமுகவுக்கு இல்லை: ஜெயக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணம் கொடுத்து வெற்றி பெறும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 129வது பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு அருகே வைக்கபட்டு இருந்த அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

we will not give money for vote: says aiadmk minister jayakumar

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்துக்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரை சுற்றி உள்ளவர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த அடிப்படையிலேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.32 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டது.

ஆனால் பொத்தாம்பொதுவாக வேண்டுமென்றே அதிமுக பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்ளை புறம் வழியாக அதிமுக ஆட்சிக்கு வரவில்லை, அதனால் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்கிற அவசியம் எங்கள் கட்சிக்கு இல்லை" இவ்வாறு கூறினார

இதற்கிடையே அதிமுகவினர், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு பணத்தை கோடி கோடியாக செலவு செய்து வருவதாக திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+