பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கே ஆபத்து-முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபர பேச்சு! ஷாக் ஆன திருமண விழா!
சென்னை: மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்ப்பதால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் தாம் இம்மியளவும் கவலைப்படப் போவது இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திராவிடர் இயக்க முதுபெரும் சிந்தனையாளர் க.திருநாவுக்கரசு இல்ல திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

முரசொலியில் பல ஆண்டுகாலம் பணியாற்றியவர்; முரசொலியை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவர்; திராவிடர் இயக்க கணணி என்று போற்றப்படுகிறவர் திருநாவுக்கரசு.
இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மகளிருக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது பலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதா? ஆட்சிக்கு வந்தால் ரூ15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தார் மோடி. ரூ15,000 அல்லது ரூ15 இதுவரை தரப்பட்டுள்ளதா? இதை பற்றி சிந்தித்து இருக்கிறார்களா? மாதம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்கிற வாக்குறுதி என்னவாயிற்று? இந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. விவசாயிகள் நலன் காப்போம் என்றார்கள். ஆனால் டெல்லியில் விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் போராடினார்கள்.. நூற்றுக்கணக்கானோர் மாண்டு போயினர்.. கடும் வெயில், கடும் குளிர், மழைக்கு நடுவே போராட்டம் நடத்தினர் விவசாயிகள்.
மத்தியில் ஆளும் மோசமான சர்வாதிகார மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்குதான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினோம். அடுத்ததாக ஜூலை 17,18-ல் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆலோசனை நடைபெற உள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி இருக்கக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதால் பிரதமர் மோடி பதற்றப்படுகிறார். இந்த பதற்றத்தில் தாம் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பிரதமர் மோடி உளறிக் கொண்டிருக்கிறார். பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications