குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் சிறப்பு பரிசு, முதலாண்டு கல்வி செலவை ஏற்போம்.. மா.சு. அசத்தல்
சென்னை: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு பரிசுடன், முதலாம் ஆண்டுக்கான கல்வி செலவு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு 285 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. இதில் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நான் சென்னையின் மேயராக இருந்த போது குழந்தை பிறந்தவுடன் தமிழில் பெயர் வைத்தால், தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அப்போது தாய்மார்கள் குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைத்தால் தங்க மோதிரம் தருவீர்கள் என்று செவிலியர்களிடம் கேட்டனர்.

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்
இதனை மோதிரத்திற்காக ஆசைப்பட்டு கேட்டதாக எண்ணக்கூடாது. அந்த ஒரு கிராம் மோதிரம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திட போவதில்லை. அதனால் தாய்மார்கள் கேட்டதற்கு காரணம், தாய் வீட்டு சீதனமாக குழந்தை பிறந்தவுடன் சீர் கொடுக்கப்படும். அப்படி தமிழக அரசே தாய்வீட்டு சீதனமாக மோதிரம் அணிந்து வாழ்த்துவது என் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்வைத்தார்கள்.

6 மாதங்களில் மீண்டும் நிகழ்ச்சி
அதுபோல் இங்கே உள்ள அனைத்து மகளிருக்கும் மகப்பேறு சுகப்பிரசவமாக நடைபெற வேண்டும். பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். உங்கள் பட்டியலை நிச்சயம் நான் வாங்கிக் கொள்வேன். இன்னும் 3 அல்லது 4 மாதங்களுக்கு பின் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வோம். அப்போது பிறந்த குழந்தைக்கு, தமிழில் பெயர் வைத்தால், இதேபோல் 6 மாதங்களுக்கு பின் இன்னொரு நிகழ்ச்சி நடத்தப்படும்.

கல்வி செலவை ஏற்போம்
285 பேரும் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் மகிழ்ச்சி. தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஒரு வேண்டுகோள். தமிழில் பெயர் வைத்தால், அந்தக் குழந்தைகளின் முதல் ஆண்டு படிப்பிற்குரிய செலவை சைதையில் உள்ள கலைஞர் கருணை கல்வி மையம் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் கூறுகையில், இந்தியாவில் அதிகளவு சுகப்பிரசவம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. கர்ப்பிணி பெண்களுக்கு என மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. குறைபாடு இல்லா குழந்தை தமிழகத்தில் பிறக்க வேண்டும். இறப்பில்லா மகப்பேறு இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காக தான் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.

தெரு நாய்கள்
தொடர்ந்து சென்னையில் தெரு நாய்கள் அதிகரிப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலான ஒன்று. 20, 30 வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் தற்போது பிடிக்கப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படுகிறது. ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படுள்ளது என்று தெரிவித்தார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications