இங்கெல்லாம் வெளுக்க போகுது கனமழை.. இந்த வார இறுதியில் செம்ம மழைக்கு வாய்ப்பு இருக்கு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இந்த மாத இறுதியில் பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த 11 மாதங்களில் இந்த மாதம் தான் கடும் குளிர் நிறைந்த மாதமாக இருந்தது. இந்த சூழலில் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் அவ்வப்போது கனமழை பெய்தது. இதன் காரணமாக தண்ணீர் பிரச்சனை என்பது தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நீங்கிவிட்டது.
இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு தமிழகத்தில் மழை பெய்வதற்கான நம்பிக்கையை மக்களிடம் அதிகப்படுத்தி உள்ளது.
பலத்த மழை
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த மாத இறதியில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்கள்
அதாவது வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் காற்றின் மேலடுக்கு சுழற்சி போன்ற காரணங்களால் நவம்பர் 28ம் தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பற்றாக்குறை
வியாழன் மற்றும் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னைக்கு வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இந்த மழை தமிழகத்திற்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
வார இறுதியில்
இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், கூறுகையில், மழை மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் இந்த வார இறுதியில் தீவிரமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.